என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கண்ணாடி வளையல்கள்"
- கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல்கள் தயாரிக்கும் பணியை பெண்கள் மூலமாக செய்து அசத்தி வருகிறார்கள்.
- தற்போது 2 டன் மது பாட்டில்களில் இருந்து 70 ஆயிரம் வளையல்களை இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் தயாரித்துள்ளனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் மது விலக்கு சட்டம் அமலில் உள்ளது. எனினும் சட்ட விரோதமாக சில இடங்களில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை கைப்பற்றும் போலீசார், கலால் துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல்கள் தயாரிக்கும் பணியை பெண்கள் மூலமாக செய்து அசத்தி வருகிறார்கள்.
முன்பு சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களை உடைத்து குப்பையாக வீசப்பட்ட நிலையில், தற்போது புதிய முயற்சியாக அவற்றை கண்ணாடி வளையல்கள் தயாரிக்க கொடுக்கின்றனர். இதற்காக பீகார் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் என்ற தன்னாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் இந்த அமைப்பின் மூலம் 150 பெண்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு கண்ணாடி வளையல்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 26-ந் தேதி பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பாட்னா மாவட்டத்தில் உள்ள சபல்பூர் கிராமத்தில் தனியாக ஒரு உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். இங்கு நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் வளையல்கள் தயாரிக்க முடியும்.
தற்போது 2 டன் மது பாட்டில்களில் இருந்து 70 ஆயிரம் வளையல்களை இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் தயாரித்துள்ளனர். இவற்றை உள்ளூர் வியாபாரிகள் மூலம் பாட்னாவில் உள்ள விமான நிலையம் மற்றும் கண்காட்சிகளில் விற்பனைக்கு வைத்துள்ளனர். இதன்மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது.
இதுகுறித்து கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்க உறுப்பினரான சுதா தேவி கூறுகையில், இந்த புதிய முயற்சியால் நல்ல லாபம் ஈட்டுகிறோம் என்றார். இவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது என கலால் துறை ஆணையர் தன்ஜி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்