என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கட்டுப்பாட்டு அறை"
- 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவக்காற்று மழை பரவலாக இடி, மின்னலுடன் பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, பெருமழையின் காரணமாகவும், இடி, மின்னல் தாக்கியும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் உடமைகளுக்கும் சேதாரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும், அவற்றினை தடுக்கும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.மழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 47 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு தேவையான தற்காலிக தங்க வைப்பதற்கான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கும் வடகிழக்கு பருவமழைக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் அவர்களின் எல்லைகளில் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள், மழை நீர் வடிகால் கால்வாய்கள் ஆகிய அடைப்பு இருப்பின் அவற்றை அகற்றவும், மழை நீர் தங்கு தடையின்றி செல்லவும் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை, கல்லூரி கல்வித்துறையினருக்கு அவர்களது பள்ளி கல்லூரிகளில் பழைய இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை இடிப்பதற்கான கடிதங்கள் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுப்பணி த்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களும் ஆய்வு செய்து இடிந்து விடக்கூடிய நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை இடிப்பதற்கான கடிதங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மின் துறையினருக்கு தாழ்வான நிலையில் செல்லும் மின் தடங்கள், சாய்ந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பங்களை கண்டறிந்து அவைகளை அகற்ற சீர் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மழை மற்றும் இடி, மின்னலின் போது நீர் நிலைகளில் குளிப்பதையும், வெளியில் வருவதையும், மரங்களில் கீழ் நிற்பதையும், ஆடு மாடுகளை மின் கம்பங்களில் கட்டுவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. அரக்கோணம் 04177-236360, 9445000507, ஆற்காடு 04172-235568, 9445000505, வாலாஜா 04172-299808, 9445000506, சோளிங்கர் 04172-290800, 9944353601, நெமிலி 04177-247260, 9789641611, கலவை 8012729137 இந்த எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். இது மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 04172-273166 / 273188 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்து அல்லது வீடியோ வடிவில் வாட்ஸ் அப் 9489668833 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.
நடப்பில் உள்ள வடகிழக்கு பருவமழை காலங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிர் சேதங்கள் இன்றி இருக்க அனைவரும் உதவ வேண்டும்.இவ்வாறு ம அதில் கூறப்பட்டுள்ளது.
- கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகரித்து வருவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யதார்.
- அணையில் இருந்து உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீலத்தநல்லூர் பாலம் கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளதால் கும்பகோணம் வட்டம் கொத்தங்குடி ஊராட்சியில் நீலத்தநல்லூர் பாலம் கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகரித்து வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது.
மேலும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமா றும், கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (24 X 7) இயங்கி வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362-264115 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்திடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது காவிரி வடிநிலகோட்டம் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) இளங்கோ, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவி பொறியாளர்கள் பூங்கொடி, ராஜ்குமார், கும்பகோணம் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்