search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட வேலை"

    • கால் தவறி கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் தூசி அடுத்த மாமண்டூர், தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் மணிகண்டன் (வயது 35). கட்டிட தொழிலாளி.

    திருமண மாகவில்லை இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று மாலை வேலை செய்து கொண்டு இருந்தபோது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மணிகண்டன் தந்தை தூசி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பண்ருட்டி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • 2-வது தளத்தில் மேல் குடிநீர் தொட்டியில் டைல்ஸ் ஒட்டும் பணியில்ஈடுபட்டிருந்தார் .

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சித்திரைசாவடியை சேர்ந்த வர் சிவா கணபதி (வயது32) கட்டிட தொழிலாளி இவர் திருமணம் ஆனவர் இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர் இவர் புதுவை முத்தையால்பேட்டையில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் கட்டிட வேலைசெய்துவந்தார். சம்பவத்தன்று மாலை கட்டிடத்தின் 2-வது தளத்தில் மேல் குடிநீர் தொட்டியில் டைல்ஸ் ஒட்டும் பணியில்ஈடுபட்டிருந்தார் . அப்போது தவறி விழுந்தார் இதனால் படுகாயம்அடைந்த அவரை புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்குசிகிச்சை பலனளிக்காமல் சிவகணபதி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • குளங்களிலும், பட்டா நிலங்களிலும் செங்கலுக்கு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
    • அமைச்சர் துரைமுருகனிடம், சுரேஷ்ராஜன் வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செய லாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் நேற்று சென்னையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான மூலப் பொரு ட்களான பாறைப்பொடி, ஜல்லி, ஹாலோ பிளாக்கல் மற்றும் செங்கல் ஆகியவை கிடைக்காத காரணத்தால் நெல்லை மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்து கட்டிட வேலை செய்து வந்தனர்.

    தற்போது அங்கு கல்குவாரிகள் நிறுத்தப்பட்ட காரணத்தால் குமரி மாவட்டத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காத நிலையில் கட்டிட தொழில்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் வேதனையடைகிறார்கள்.

    மேலும் குளங்களிலும், பட்டா நிலங்களிலும் செங்கலுக்கு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்காமல் இருப்பதால், செங்கல் தொழில் செய்கிறவர்கள்மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே குமரி மாவட்டத்தில் கட்டிட தொழி லுக்கு தேவையான மூலப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும், குளங்கள் மற்றும் பட்டா நிலங்களில் மண் எடுப்பதற்கும் உரிய வழிகளை செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×