search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகள் வேலை நிறுத்தம்"

    • ஈரோடு மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 150 அரிசி ஆலைகள் ஈடுபட்டுள்ளன.
    • போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் டன் அரிசி அரைக்கப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மீது மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. இதனால் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டியை திரும்ப பெறக்கோரியும் அகில இந்திய அளவில் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு ஆலை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 150 அரிசி ஆலைகள் ஈடுபட்டுள்ளன. இதே போல அரிசி விற்பனை கடைகள் 400-க்கும் மேற்பட்டவை பூட்டப்பட்டுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமை யாளர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் கந்தசாமி கூறியதாவது:-

    மத்திய அரசு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரிசி விலை மட்டும் கிலோ ஒன்றுக்கு ரூ.3 முதல் 5 வரை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    இதை திரும்ப பெறக்கோரி இன்று அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி விற்பனை வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் அரிசி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 150 அரிசி ஆலைகள், 400 அரிசி கடைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றன. ஒரு அரிசி ஆலையில் நாளொன்றுக்கு சராசரியாக 10 டன் அரிசி அரைக்க ப்படும். போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் டன் அரிசி அரைக்கப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×