search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி ஆலைகள்"

    • தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • ரெயிலில் 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இது தவிர கோடைகால நெல் சாகுபடியும் நடைபெறும்.

    இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் அரிசியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1, 250 டன் புழுங்கல் அரிசி ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 150 அரிசி ஆலைகள் ஈடுபட்டுள்ளன.
    • போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் டன் அரிசி அரைக்கப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மீது மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. இதனால் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டியை திரும்ப பெறக்கோரியும் அகில இந்திய அளவில் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு ஆலை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 150 அரிசி ஆலைகள் ஈடுபட்டுள்ளன. இதே போல அரிசி விற்பனை கடைகள் 400-க்கும் மேற்பட்டவை பூட்டப்பட்டுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமை யாளர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் கந்தசாமி கூறியதாவது:-

    மத்திய அரசு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரிசி விலை மட்டும் கிலோ ஒன்றுக்கு ரூ.3 முதல் 5 வரை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    இதை திரும்ப பெறக்கோரி இன்று அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி விற்பனை வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் அரிசி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 150 அரிசி ஆலைகள், 400 அரிசி கடைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றன. ஒரு அரிசி ஆலையில் நாளொன்றுக்கு சராசரியாக 10 டன் அரிசி அரைக்க ப்படும். போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் டன் அரிசி அரைக்கப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்ப ட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்ப ட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.

    திண்டுக்கல் நகரில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், கடைகள் உள்ளன. இவை அனைத்தும் இன்று காலைமுதல் அடைக்கப்பட்டிருந்தது. மவுன்ஸ்புரம் கடைவீதி, மார்க்கெட் பகுதிகளில் கடைவாசல் முன்பு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுர ங்களை ஒட்டி போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அரிசி ஆலை மண்டி மற்றும் கடை உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் கனி தெரிவிக்கை யில், இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் அரிசிக்கு வரிவிதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவு பட்டியலில் உள்ள அரிசிக்கு வரி விதிக்கப்பட்டால் இதன் விலை மேலும் உயரும். ஏற்கனவே வியாபாரிகள் பல்வேறு நெருக்கடிக்கு இடையில் அரிசி ஆலைகள் நடத்தி வருகின்றனர். கூடுதல் விலையேற்றத்தை நடைமுறைப்படுத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்க ப்படுவார்கள்.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் 5000-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த வரிவிதிப்பை மறுபரிசீலனை ெசய்ய வேண்டும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு சார்பில் உணவுப் பொருளான அரிசி ,கோதுமைக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது.
    • தமிழகத்தில் மொத்தம் 8000 அரிசி ஆலைகள் உள்ளன.

    சேலம்:

    மத்திய அரசு சார்பில் உணவுப் பொருளான அரிசி ,கோதுமைக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முழுவதும் அரிசி ஆலை உரிமையாளர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இது குறித்து சேலம் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் சியாமளநாதன் நிருபர்களிடம் கூறியதாவது-

    உணவு பொருட்களுக்கு எப்போதும் வரி உயர்வு இருக்கக்கூடாது, இதன் மீது வரி விதித்தால் ஏழை எளிய மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். நாட்டில் 80 சதவீதம் பேர் ஏழை நடுத்தர மக்கள் தான், இதுநாள் வரை அரிசிக்கு எந்த அரசும் வரியை விதித்தது இல்லை. தற்போது மத்திய அரசு 5 சதவீதம் ஜிஎஸ்டியை விதித்துள்ளது. இந்த வரி வருகிற 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    தமிழகத்தில் மொத்தம் 8000 அரிசி ஆலைகள் உள்ளன. இந்த அரிசி ஆலைக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல் மூட்டைகள் அரவைக்கு வருகிறது. இந்த வகையில் நாள் ஒன்றுக்கு அரிசி ஆலைகளில் 20 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது.

    இந்த நிலையில் அரிசியின் மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை நீக்க கோரி நாளை அரிசி ஆலை உரிமையாளர்கள் தமிழக முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அரிசி மீதான ஜிஎஸ்டி வரிக்காக போராட்டம் தொடரும். மத்திய அரசு உடனடியாக 5 சதவீதம் ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும்.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழக முழுவதும் 8000 ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதனை சார்ந்த லாரி உரிமையாளர்கள் ,சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரிசி வணிகர்கள், அரிசி வணிகத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 5 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதுபோல் சேலம் லீ பஜார் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் பாபு கூறுகையில், மத்திய அரசு கோதுமை, உளுந்தம் பருப்பு உட்பட 50 உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. உணவு பொருட்களுக்கு இதற்கு முன்பு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. உணவுப் பொருட்கள் மீது வரி போட்டால் அது பொதுமக்களை பாதிக்கும். உணவு பொருட்கள் மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டியை கண்டித்து அகில இந்திய அளவில் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது .நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்றும், நாளையும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது . சேலத்தில் லீ பஜார் வர்த்தக சங்கத்தினர் நாளை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் .சுமார் 300 கடைகள் அடைக்கப்படுகிறது. வணிகர்கள் பொதுமக்கள் நலன் கருதி மத்திய அரசு உணவுப் பொருட்கள் மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×