search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு 1250 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைப்பு
    X

    தஞ்சையில் இருந்து நாமக்கல்லுக்கு 1250 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைப்பு

    • தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • ரெயிலில் 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இது தவிர கோடைகால நெல் சாகுபடியும் நடைபெறும்.

    இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் அரிசியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1, 250 டன் புழுங்கல் அரிசி ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    Next Story
    ×