search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் போக்குவரத்து நெரிசல்"

    • சேலம் மாநகராட்சி 90 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் 10.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
    • சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் போக்குவரத்துக்கு தீர்வு காணப்படாத வகையில் கட்டப்பட்டதாக பலரும் குமுறலை தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 90 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் 10.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சேலம் மாநகராட்சியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கடை கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் முளைத்துள்ளன.

    மேலும் தினமும் வெளி யூர், வெளிமாநி லங்களில் இருந்து 2.50 லட்சம் மக்கள் வந்து செல்லும் பகுதியாக சேலம் மாநகராட்சி விளங்கி வருகிறது.

    சேலம் மாநகரின் முக்கிய புறவழிச்சாலைகளில் ஒன்றாக உள்ள சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை தினமும் பல்லாயிரக்கணக்கான இருசக்கர, 4 சக்கர, கன ரக வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன. பெங்களூரு, கோவையில் இருந்து சென்னை, திருச்சி, மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை கடந்து தான் சென்றாக வேண்டும்.

    இதுபோன்ற சூழலில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் போக்குவரத்துக்கு தீர்வு காணப்படாத வகையில் கட்டப்பட்டதாக பலரும் குமுறலை தெரிவித்துள்ள னர்.

    கடும் போக்குவரத்து நெரிசல்

    சேலம் நகர பகுதியில் இருந்து ஆத்தூர், கள்ளக்குறிச்சி, மல்லூர், ராசிபுரம், நாமக்கல், திருச்சி பகுதிகளுக்கும், ஈரோடு, கோவை மார்க்கமாகவும் செல்லும் வாகனங்கள் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை கடந்து சென்று வருகின்றன. சேலம் மாநகர வாகனங்களும், வெளிமாவட்டம் சென்று வரும் வாகனங்களும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை அதிகளவு பயன்படுத்தி வருகின்றன. மேலும் சேலம் மாநகரில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பஸ்களும் இந்த சாலையில் அதிகளவு இயக்கப்படுகிறது.

    இதனால் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இதில் பல கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் நாமக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் சீல நாயக்கன்பட்டி ரவுண்டாவை கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதே நிலை அடிக்கடி நீடிக்கிறது. இதற்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் தாதகாப்பட்டி சாலையி லிருந்து நாமக்கல் பிரதான சாலை இணைக்கும் வகையில் பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் சேலம் மாநகரம் முழுவதும் அதிகப்படியான பாலங்கள் கட்டப்பட்ட நிலையில் மிகவும் தேவைப்படக்கூடிய இந்த ரவுண்டானா பகுதியில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கான கூடுதலாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக தீர்வாக ரவுண்டானா பகுதியில் கூடுதலாக போக்குவரத்து போலீசாரை பணியாற்றி நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • காந்தி சிலை முதல் முத்தாலம்மன் கோவில் வரை அதிக கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னமனூர் நகராட்சி ஆணையாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர்-சீப்பாலக்கோட்டை சாலையில் காந்தி சிலை முதல் முத்தாலம்மன் கோவில் வரை அதிக கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. காந்திசிலை பஸ்நிறுத்தம் பகுதியில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த நிலையில் ஆம்னி பஸ்கள் மற்றும் லாரிகள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவிகள் மட்டுமல்லாது காலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அதிவேகமாக வாகனங்கள் வருகின்றன. இதனால் சாலையை கடக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்து போலீசார்களை நியமித்து விபத்துகளை தடுக்க வேண்டும். காந்திசிலை, தேரடி, மார்க்கையன்கோட்டை, ரவுண்டானா ஆகிய பஸ் நிறுத்தங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னமனூர் நகராட்சி ஆணையாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடைக்கானலில் பிரதான பகுதியான அண்ணா சாலையில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் காக்க விரைவான தீர்வை மேற்கொள்ள வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அண்ணா சாலை நகரின் பிரதான பகுதியாக உள்ளது. இந்த சாலையில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை 10 மணிக்கு மேல் அன்றாட பணிகளுக்கு செல்வோர், அலுவலக வேலைக்கு செல்வோர் என பலரும் இவ்வழியில் செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது.

    இவ்வழியில் சரக்கு வாகனங்களை இயக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்க ப்பட்டுள்ளது. ஆனால் சரக்கு வாகன ஓட்டுனர்கள் அவர்கள் நினைத்த நேரத்தில் இவ்வழியாக வாகனத்தை இயக்குவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இருபுறங்களிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திச் செல்வதால் அத்தியாவசிய பணிக்கு செல்வோர் கடும் அவதி அடைகின்றனர்.

    ஒரு வழிச் சாலையாக இந்த சாலை மாற்ற ப்பட்டிருந்தாலும் விதியை முறையாக யாரும் பின்பற்றுவது இல்லை.இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணமாக உள்ளது. போக்குவரத்து போலீசார் ஒரு வழி பாதையில் செல்வோர் மற்றும் பார்க்கிங் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள அண்ணா சாலை பகுதியில் வாகனங்களை நிறுத்துவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் மூஞ்சிக்கல் பகுதியில் கொடைக்கானல் - வத்தலகுண்டு செல்லும் பிரதான சாலையின் விரிவாக்க பணி என்ற பெயரில் சாலை ஓரம் அமைக்கப்பட்டிருந்த கடைகள் நெடுஞ்சாலைத்து றையால் பல மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டது. ஆனால் இன்று வரை சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது.

    மூஞ்சிக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக பகுதிக்கு அருகிலேயே பிரதான சாலையில் கடைகள் முன்பு மணல், ஜல்லி, செங்கல் போன்றவைகளை கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டு வியாபாரங்கள் நடு ரோட்டிலேயே நடைபெற்று வருகிறது. இதனை நெடுஞ்சாலை துறையினரும் போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்ளாததால் உயிர் பலி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூஞ்சிக்கல் பகுதியில் பிரதான சாலையின் இரு புறங்களிலும் கனரக வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் சாலையின் வளைவு பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் நெடு ஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கண் துடைப்புக்காக சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    ஆனால் பிரதான சாலைகளில் காய்கறி வியாபாரங்கள்செய்து வருகின்றனர். இதனை வாங்குவதற்கு சாலையி லேயே சுற்றுலா பயணி கள் வாகனங்களை நிறுத்துவதால் போக்கு வரத்து நெரிசலும் விபத்தும் ஏற்பட்டு வருகிறது.

    முறையான பார்க்கிங், கழிப்பறை வசதி இல்லை. ஆனால் பிரதான நெடுஞ்சாலைகளில் இடையூறு இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழியும் இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டிச்செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் காக்க விரைவான தீர்வை மேற்கொள்ள வேண்டும்.

    ×