search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா மோதல்"

    • கிச்சா விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.
    • உன்னை கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர் திருவள்ளுவர் காலனி 63-வது தெருவில் வசித்து வருபவர் சதீஷ். இவரது வீட்டில் நேற்று இரவு 2 மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசப்பட்டுள்ளது. இதில் பால்கனி பகுதி தீப்பிடித்து எரிந்தது.

    இது தொடர்பாக கே.கே. நகர் போலீசில் சதீஷ் புகார் அளித்தார். அதில் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்பீடு ஹரீஸ் என்பவர் தனக்கு இன்ஸ்டாகிராமில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவர்தான் மண்ணெண்ணெய் பாட்டில்களை வீசி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மது பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி வீட்டின் பால்கனியில் வீசி சென்ற ஹரீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சதீஷ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    சதீசும், ஹரீசும் நண்பர்களாக இருந்து பிரிந்துள்ளனர். இருவருக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    முதலில் நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் பிரிந்துள்ளனர். சதீசின் கூட்டாளியான கிச்சா என்பவர் கடந்த ஜூன் மாதம் ஹரீசை தாக்கி காயப்படுத்தி உள்ளார். பின்னர் கிச்சா விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்.

    இதன் பிறகு ஹரீஸ், சதீசை அழைத்து நீ சொல்லித்தான் கிச்சா என்னை தாக்கினார். தற்போது உன்னுடன் யாரும் இல்லை. உன்னை கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் அது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்து மண்ணெண்ணெய் பாட்டில்களும் ஹரீஸ் வீசி இருப்பது தெரிய வந்துள்ளது.

    18 வயதே ஆகும் ஹரீஸ் மீது கொலை மிரட்டல் வழக்கு இருக்கும் நிலையில் 19 வயது சதீஷ் மீது 3 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×