search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்கைகொண்டான்"

    • கர்நாடகா மாநிலம் பெங்களூரு காவேரி நகரை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 50). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார்.
    • அங்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போனது.

    நெல்லை:

    கர்நாடகா மாநிலம் பெங்களூரு காவேரி நகரை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 50). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    அந்நிறுவன வளாகத்தில் ஏராளமான காப்பர் வயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போனது. இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் கங்கை கொண்டான் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் வயர்களை திருடிய மர்மநபர்களை தேடி வரு கின்றனர்.

    • தனியாருக்கு சொந்தமான சோலார் நிறுவனம் ஒன்று மேட்டு பிராஞ்சேரியில் செயல்பட்டு வருகிறது.
    • சுமார் 300 கிலோ எடை கொண்ட காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டு பிராஞ்சேரியில் தனியாருக்கு சொந்தமான சோலார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தின் காவலாளியாக நாங்குநேரி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்த முருகன்(வயது 48) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நிறுவனத்தின் வளாகத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு ஒரு மூலையில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 300 கிலோ எடை கொண்ட காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் உடனடியாக கங்ைககொண்டான் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் வயர்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன காப்பர் வயரின் மதிப்பு ரூ.90 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

    ×