search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓலாப் ஸ்கோல்ஸ்"

    • தற்போது 8 வருடங்கள் வசித்தவர்கள்தான் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்
    • நம் நாட்டு சட்டங்களை மதித்தவர்கள் இனி நம் நாட்டினர் என்றார் ஓலாப்

    ஜெர்மன் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதா, அந்நாட்டில் நீண்ட காலமாக வசித்து வருபவர்கள் குடியுரிமை பெறுவதில் நிலவி வந்த சிக்கல்களை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது.

    நேற்று, ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) கொண்டு வந்திருக்கும் இந்த மசோதா, 382-234 எனும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உறுப்பினர்களில் 23 பேர் வாக்களிக்கவில்லை.

    தற்போது ஜெர்மனியில் 8 வருடங்கள் வசித்தவர்கள்தான் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.

    இந்த மசோதா சட்டமானால், ஜெர்மனியில் 5 வருட காலங்கள் வசித்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.

    மேலும், இரட்டை குடியுரிமை இனி அனுமதிக்கப்படும். ஜெர்மனியில் தற்போது வரை இரட்டை குடியுரிமை தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரவிருக்கும் புதிய சட்டம் குறித்து அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ், "பல தலைமுறைகளாக ஜெர்மனியில் வசித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்களுக்கு உதவ இந்த புதிய குடியுரிமை சட்டம் பயனளிக்கும். பல தசாப்தங்களாக எங்கள் நாட்டு சட்டதிட்டங்களை மதித்து நடந்த பல அயல்நாட்டினர்கள், இனி நம் நாட்டினர்கள்" என தெரிவித்தார்.

    அந்நாட்டு ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மெய்ர் (Frank-Walter Steinmeier) இம்மசோதாவில் கையெழுத்திட்டதும், இது சட்டமாகி விடும்.

    அயல்நாட்டினர் குடியுரிமை பெற ஜெர்மன் முன்னோர்களின் வம்சமாக தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தற்போது வரை அங்கு இருந்து வந்தது.

    எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், இச்சட்டம், ஜெர்மன் குடியுரிமையை மலிவாக்கி விடும் என கூறி எதிர்த்தனர்.

    • ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
    • டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார்.

    புதுடெல்லி:

    இந்தியா-ஜெர்மனி இடையே அரசுகளுக்கு இடையேயான ஆலோசனை நெறிமுறை கடந்த 2011-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த அமைப்பு உருவாக்கிய பிறகு முதல் முறையாக தனிநபர் பயணமாக ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இன்று (சனிக்கிழமை) காலை இந்தியா வருகிறார். அவரது இந்த 2 நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.

    டெல்லி வந்திறங்கும் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின், ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பிலும் ஒப்பந்தங்கள் கைமாறப்படுகின்றன. அத்துடன் கூட்டாக அறிக்கையும் வெளியிடப்படுகிறது.

    பிரதமர் மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் வர்த்தக சந்திப்பு ஒன்றில் ஓலாப் ஸ்கோல்ஸ் பங்கேற்கிறார். பிற்பகல் ராஜ்காட் செல்லும் ஜெர்மனி பிரதமர், அங்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசுகிறார்.

    தனது 2-வது நாள் (26-ம்தேதி) பயணத்திலும் ஜெர்மனி பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அன்று காலையில் பெங்களூரு வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். பின்னர் இந்த பயணத்தை முடித்துக்கொண்டு மாலையில் அவர் ஜெர்மனி திரும்புகிறார்.

    பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமரும் கடந்த ஆண்டு 3 முறை சந்தித்து இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்தியாவும் ஜெர்மனியும் வலுவான பொருளாதார ஒத்துழைப்பை பகிர்ந்து வருகின்றன. ஐரோப்பிய கூட்டமைப்பில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக ஜெர்மனி உள்ளது. இந்தியாவின் முதல் பத்து உலக வர்த்தக நட்பு நாடுகளில் தொடர்ச்சியாக ஜெர்மனியும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×