search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓணம் திருவிழா"

    • ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஓணம் திருவிழாவை கொண்டாடினர்.
    • ஆடல், பாடல் பாடி நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    ஈரோடு:

    கேரளா மாநில மக்களால் ஓணம் திருவிழா உலகம் ழுழுவதும் இன்று மகாபலி மன்னரை வரவேற்று அத்த ப்பூ கோலமிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரு கிறது. இதே போல் தமிழகம் முழுவதும் மலையாள மக்க ளால் ஓணம் விழா உற்சாக மாக கொண்டாடப் பட்டது.

    கேரள மாநிலத்தை மகாபலி என்ற மன்னர் சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வ தில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது கிருஷ்ணர் வாமணனாக (குள்ள உருவில்) உருவெ டுத்து வந்து மூன்றடி மண் கேட்டார்.

    மகாபலியும் தந்தார். ஒரு அடியால் இந்தப் பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த கிருஷ்ணருக்கு மூ ன்றாவது அடிக்காகத் தனது தலையையே கொடு த்தார் மகாபலி மன்னர். அவருக்கு முக்தி அளிக்க வேண்டி அவர் தலையில் கால் வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளி னார் கிருஷ்ணர்.

    மகாபலி மன்னர் இன்னும் மூமிக்கு அடியில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பதா கவும், அவர் ஆண்டுக்கு ஒரு முறை திருவேணம் அன்று பூமிக்கு வந்து மக்களை சந்தி ப்பதாக வும் கேரள மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை யொட்டி அவரை வரவேற்கும் வகையில் திருவேணம் நாளன்று மலையாள மக்க ளால் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டு வரு கிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மகாபலி மன்னரை வரவேற்கு ம் வகையில் ஓணம் திருவிழா வை கடந்த 10 நாட்களாக வாசல்களில் கோலமிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

    முதல் நாள் ஒரே வகையான பூக்கள் 2-ம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து பத்தாம் நாள் 10 வகையான பூக்களால் அழகு செய்தனர். 10-ம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தந்து இன்று பெரிய அளவிலான அத்தப்பூ கோலமிட்டனர்.

    இதையொட்டி ஒணத்தின் 10-வது நாளான மலையாள மக்கள் இன்று அதிகாலை யிலேயே குளித்து புத்தம் புதிய துணிகள் அணந்து வீட்டு வாசல்களில் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்ன ரை வரவேற்றனர். தொட ர்ந்து மகாபலி மன்னரின் உருவத்தை வீட்டில் வைத்து கோலமிட்டு வழிபட்டனர்.

    இதை தொடர்ந்து இன்று மதியம் தங்கள் உறனர்களை வீட்டுக்கு அழைத்து திரு வோண சக்தி விருந்து கொடு த்தனர். கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவு கள் தயார் செய்யப்படும்.

    "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. 6 சுவை களில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் "ஓண சாத்யா" என்ற உணவு தயாரிக்கப்படு கிறது.

    புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சி ப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்ப ட்டு கடவுளுக்கு படைக்கப்பட்டன.

    பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. 2 வகையான பாயசம், இனிப்பு வகைகள் பச்சடி, அப்பம், நேந்தி சிப்ஸ், பீட்ரூட் உறுகாய், சரக்கரை வரட்டி உள்பட 26 வகையாக உணவு வகைகளை சமைத்து கேரள பாரம்பரியம்படி விள க்கேற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து தங்கள் உறவினர்க ளுக்கு விருந்து வழங்கினர்.

    இதை தொடர்ந்து ஒரு வருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்ட னர். மேலும் ஆடல், பாடல் பாடி நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    • ஓணக்கோடி பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு
    • அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி பகவதி அம்மனுக்கு சிவப்பு நிறபட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் திருவிழா இன்று தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 30-ந்தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    முதல் நாளான இன்று உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி பகவதி அம்மனுக்கு பச்சைநிறப்பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை 4-/30 மணிக்கு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. பின்னர் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீபலி பூஜை, நிவேத்திய பூஜை, உஷா தீபாராதனை போன்றவை நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்க கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் ஓணக்கோடிபட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனையும் நடந்தது. சாயராட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருளச்செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனை எழுந்தருளசெய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அத்தாழ பூஜையும்ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    திருவோணம் நட்சத்திரமான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு கேரள பாரம்பரிய உடையான வெண்பட்டு ஓணக்கோடியாக அணிவித்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) அவிட்டம் நட்சத்தி ரத்தையொட்டி காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு சிவப்பு நிறபட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    ×