search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் சூறை"

    • பண்ருட்டி அருகே ஓட்டலை சூறையாடிய கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • உரிமையாளர் பன்னீரை தாக்கிவிட்டு பொருட்களை தாக்கி சேதப் படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூர் பகுதியில் காட்டுக்கூடலூர்- விருத்தாசலம் செல்லும் சாலைஅருகே காட்டு கூடலூரைசேர்ந்த பன்னீர்செல்வம் என்ப வர்ஆனந்தாயி அம்மன் என்ற பெயரில் துரித உணவகம் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு கடந்த 9-ந் தேதி மதியம் சாப்பிட வந்த பெரிய காப்பான் குளத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் விலை குறைவாக சிக்கன் ரைஸ் கேட்டு வாக்குவாதம் செய்த னர்.இதனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்புக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    அப்போது காப்பான் குளத்தை சேர்ந்த இளைஞர்கள் ஊரில் உள்ள சிலருக்கு போன் செய்து 10-க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்து கடையினுள் நுழைந்து உரிமையாளர் பன்னீரை தாக்கிவிட்டு பொருட்களை தாக்கி சேதப் படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் தொடர்பா கமுத்தாண்டி குப்பம் போலீசில் பன்னீர்செல்வம் கொடுத்தபுகாரின் பேரில் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டஇளையராஜா (35),தீனா(20),ஸ்டாலின்(21),ராக்ராஜ்குமார் (26), சுபாஷ் ( 22 ),பரத் (35)சங்கர் (37)ஆகியோரைகைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தலைமறைவு எதிரிகளை தேடி வருகின்றனர்.

    ×