search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒயிலாட்டம்"

    • கலைக்குழுவினரின் தமிழர் பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
    • வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ பள்ளியில், இந்திய தேசத்தின் சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு, வேளாங்கண்ணி கல்வி குழுமம் மற்றும் ஓசூர் செயின்ட்பீட்டர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்திய கோவை கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவினரின் தமிழர் பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிகழ்ச்சியை செயின்ட் பீட்டர்ஸ், அதியமான் கல்லூரி மற்றும் வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் நிறுவனர் டாக்டர். தம்பிதுரை எம்பி., தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார்.

    இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஒயிலாட்டம் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.

    இந்த நிகழ்ச்சியினை பள்ளியின் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

    முடிவில் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் மற்றும் குழுவினருக்கு தம்பிதுரை எம்பி., நினைவு பரிசுகளை வழங்கி, நிகழ்ச்சியினை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு காணிக்காயக்குவதாக கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் பர்கூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் பர்கூர் ஜெயபால், வேப்பனஹள்ளி முனியப்பன், வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ பள்ளியின் முதல்வர் மற்றும் இயக்குநரான விஜயலட்சுமி, அறிஞர் அண்ணா கல்லூரியின் முதல்வர் தனபால் மற்றும் சாதிக், வேலாயுதம், தொழிலதிபர் ரகுராம், வேளாங்கண்ணி பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாங்கண்ணி பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • தஞ்சை பெரிய கோவில் வளாகத்திலிருந்து அரண்மனை வரையிலான கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
    • நாட்டுபுற கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், துடும்பாட்டம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, உலக சுற்றுலா தினவிழா, தூய்மை இயக்க விழிப்புணர்வு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    அதன்படி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இன்று காலை தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தூய்மை பணி செய்தனர்.

    இதையடுத்து பெரிய கோவில் வளாகத்தில் இருந்து அரண்மனை வரையிலான கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

    இதனை இந்தியா சுற்றுலா அமைச்சக த்தின் தென் மண்டல இயக்குனர் பாரூக்அகமது முன்னிலையில் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொ ன்ராஜ் ஆலிவர் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு உலக சுற்றுலா தினம் சம்பந்தபட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

    இதனை தொடர்ந்து தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டா தர்பார் மண்டபத்தில் மாணவ-மாணவிகளுக்கு தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று மாலையில் சிவகங்கை குளம், ஸ்வாட்ஸ் சர்ச், கோட்டை சுவர் மற்றும் அகழி, தேர்முட்டி, தஞ்சை நால்வர் இல்லம், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி வழியாக அரண்மனை வரை பாரம்பரிய நடைபயணம் நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து பெரிய கோவிலில் நடைபெற உள்ள கலாச்சார திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நாட்டுபுற கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கரகாட்டம், ஒயிலாட்டம், துடும்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் இந்தியா சுற்றுலா தகவல் தொடர்பு அலுவலர் ராஜ்குமார், இன்டாக் கவுரவ செயலாளர் முத்துக்குமார், நகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 40 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட சலங்கையாட்டமும் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    காங்கயம் :

    காங்கேயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சார்பில் ஒயிலாட்டம் மற்றும் சலங்கையாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டமும், 40 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட சலங்கையாட்டமும் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம்மருதாசல அடிகளார்,ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பனர் விடியல் சேகர்,சலங்கையாட்ட பயிற்சி வழங்கிய ஜெ.கே கலை குழுவின் தலைவரும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமானஜெயக்குமார், வேளாண் விஞ்ஞானி மயில்சாமி, ஒயிலாட்டம் பயிற்சி வழங்கிய சங்கமம் கலை குழுவின் ஆசிரியர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் காங்கேயம் ஒன்றிய சேர்மன் மகேஷ் குமார் ஆகியோர் கலைஞர்களோடு சேர்ந்து சலங்கைகட்டி மேடையில் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.இந்த நிகழ்ச்சியை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

    ×