search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கேயத்தில் ஒயிலாட்டம் - சலங்கையாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி
    X

    அரங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்

    காங்கேயத்தில் ஒயிலாட்டம் - சலங்கையாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி

    • 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 40 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட சலங்கையாட்டமும் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    காங்கயம் :

    காங்கேயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சார்பில் ஒயிலாட்டம் மற்றும் சலங்கையாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டமும், 40 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட சலங்கையாட்டமும் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம்மருதாசல அடிகளார்,ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பனர் விடியல் சேகர்,சலங்கையாட்ட பயிற்சி வழங்கிய ஜெ.கே கலை குழுவின் தலைவரும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமானஜெயக்குமார், வேளாண் விஞ்ஞானி மயில்சாமி, ஒயிலாட்டம் பயிற்சி வழங்கிய சங்கமம் கலை குழுவின் ஆசிரியர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் காங்கேயம் ஒன்றிய சேர்மன் மகேஷ் குமார் ஆகியோர் கலைஞர்களோடு சேர்ந்து சலங்கைகட்டி மேடையில் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.இந்த நிகழ்ச்சியை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×