என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒயர்மேன்"
- ஆரோக்கியசாமி மயிலாடுதுறை மாவட்டம் பாலையூரில் உள்ள மின்துறையில் ஒயர்மேனாக வேலை செய்து வருகிறார்.
- காரைக்காலை அடுத்த தருமபுரத்தில் டைல்ஸ் வேலை செய்துவந்தார்.
புதுச்சேரி:
தஞ்சாவூர் திருவிடைமருதூர், புதூர் வடக்கு மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் மயிலாடுதுறை மாவட்டம் பாலையூரில் உள்ள மின்துறையில் ஒயர்மேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிடா உஷாரானி. இவர்களுக்கு ஸ்ரீவாக் (வயது 24), கிலாடிஸ் (22), மார்க்வாக் (20) என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் ஸ்ரீவாக் என்ஜினியரிங் முடிததுவிட்டு கிடைக்கும் வேலைகளை செய்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக, காரைக்காலை அடுத்த தருமபுரத்தில் டைல்ஸ் வேலை செய்துவந்தார். வழக்கம் போல் நேற்று வேலை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி தூக்கிவீச ப்பட்டார்,
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைகாக சேர்த்து இருப்பதாக, ஆரோக்கி யசாமியின் நண்பர் சிவக்குமார் என்பவர் ஆரோக்கியசாமிக்கு தகவல் கூறியுள்ளார். உடனே ஆரோக்கியசாமி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தபோது, ஸ்ரீவாக் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து, ஆரோக்கியசாமி, காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்