search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்ததொழிலாளர்கள்"

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் படுத்து உறங்கினர்.
    • பெண்களுக்கு கழிவறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் என்.டி.பி.எல். அனல்மின் நிலையம் உள்ளது.

    என்.டி.பி.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை போல சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரமான குடிநீர் வசதி, கேண்டீன் வசதி, உணவு அருந்தும் அறை,

    பெண்களுக்கு பணியிடத்தின் அருகே கழிவறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் நேற்று அனல்மின் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு சங்க செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சுமுத்து முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று இரவு தூத்துக்குடி அனல்மின் நிலையம் முன்பு சாலையில் படுத்து உறங்கினர். இந்நிலையில் என்.டி.பி.எல். அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ×