search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒட்டகம்"

    • தொண்டி பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் ஒட்டகத்தை வைத்து வசூல் செய்து வருகின்றனர்.
    • இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சிப்பகுதியில் உள்ள கடைகளில் ஒட்டகத்தை வைத்து வசூல் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் தொண்டி அருகே நம்புதாளையில் கந்தூரி விழா நடந்தது. அதில் வெளியூரில் இருந்து ஏராளமானோர் வருவதை எதிர்பார்த்து ஒட்டகத்தை காண்பித்து வசூல் செய்தனர். சிலர் ஒட்டகத்தை புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். சிறுவர்களை ஒட்டகத்தின் மேல் ஏற்றி சிறிது தூரம் சவாரி செய்ததற்கு தனியாக கட்டணம் வசூலித்தனர். கந்தூரி விழா முடிந்தும் தொடர்ந்து முகாமிட்டு கடைகளில் வசூல் செய்து வருகின்றனர். இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    ஒட்டகத்தில் மணல் கடத்தியவர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை

    லாரி, டிப்பர், டிராக்டர் மூலம்  மணல் கொள்ளை கேள்விபட்டிருப்போம் ஆனால் இங்கு வித்தியா சமாக ஒட்டகத்தை வரவழைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தி போலீசார் வந்தவரிடம் பறிமுதல் செய்துள்ளனர். 

    மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை சரவணன் (வயது 52). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வருகிறார். 

    நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் மறவ மங்கலம் பஸ் நிலையத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டி யில் ஒட்டகத்தை கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை பார்த்தனர். 

    மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்த மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
    ×