search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏமாற்றிய"

    • சுனில் 1 கிலோ தங்க கட்டியையும் எடுத்து சென்றார்
    • தியாகராஜன் பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை பெரியகடை வீதியை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 56). நகை வியாபாரி.

    இவர் பெங்களூரில் உள்ள நகைக்கடையை சேர்ந்த சுனில்(50) என்பவரிடம் தொழில் ரீதியான பழக்கம் வைத்திருந்தார்.

    அவரிடம் தங்க நகை மற்றும் தங்க கட்டிகளை கொடுத்து வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில், நேற்று கோவை வந்த சுனில் 963 கிராம் எடையிலான தங்க நகைகளை தியாகராஜனிடம் கொடுத்து விட்டு அவரிடம் இருந்து 1003 கிராம் தங்க கட்டிகளை வாங்கினார்.

    பின்னர் 963 கிராம் நகை போக மீதம் கொடுக்க வேண்டிய பணத்தை சிறிது நேரத்தில் கொண்டு வந்து தருவதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தியாகராஜன் சுனில் கொடுத்த தங்க நகைகளை சோதனை செய்தார். அப்போது அவர் கொடுத்து சென்ற 963 கிராம் தங்க நகையும் போலியானது என்பது தெரியவந்தது.

    போலி நகைகளை கொடுத்து விட்டு 1003 கிராம் தங்க கட்டிகளை வாங்கி சென்றதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தியாகராஜன் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.

    ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தியாகராஜன் பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலி நகைகளை கொடுத்து 1 கிலோ தங்க கட்டி வாங்கி ஏமாற்றி மோசடி செய்த சுனில் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    • பூமிக்கடியில் புதையல் இருப்பதாகவும் அதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும் சுதாகரிடம் கூறியுள்ளனர்.
    • தம்பதியினர் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). இவர் அதே பகுதியில் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் குடியா (35) மற்றும் பீம் (42). இவர்கள் தற்போது கோவையில் வசித்து வருகிறார்கள். 2 பேரும் சுதாகரின் கடைக்கு தினமும் பழஜூஸ் குடிக்க வருவது வழக்கம்.

    இவர்கள் தங்கள் ஊரில் பூமிக்கடியில் புதையல் இருப்பதாகவும் அதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும் அவரிடம் கூறியுள்ளனர். இதனை நம்பிய சுதாகர் மற்றும் அவரது மனைவி ரூ.25 ஆயிரத்தை அவர்களிடம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

    சம்பவத்தன்று ஒப்பணக்கார வீதியில் உள்ள கோவிலுக்கு வந்து நகைகளை பார்க்க வருமாறு பீம் அழைத்துள்ளார். இதையடுத்து தம்பதியினர் கோவிலுக்கு பணத்துடன் சென்றனர். ஆனால் குடியா , பீம் 2 பேரும் நகைகளை காட்டாமல் பணத்தை நைசாக திருடி செல்ல முயன்றனர்.

    உடனே சுதாரித்து கொண்ட தம்பதியினர் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×