என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "என்.ஐ.ஏ. சோதனை"
- என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- மதசார்பற்ற அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று மாநில துணைத்தலைவர் கூறினார்.
ராமநாதபுரம்
தேசிய பாதுகாப்பு முகமை என்ற என்.ஐ.ஏ. அமைப்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் சோதனை நடத்தியது. இதனை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமையில் ராமநாதபுரம் சந்தை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜெமிலு நிஷா, மாவட்ட துணை தலைவர்கள் சோமு, சுலைமான், பொருளாளர் அசன் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் நஜ்முதீன் வரவேற்றார். கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது கண்டன உரை யாற்றினார்.
பெரியபட்டினம் நகர் தலைவர் பீர் முகைதீன் கண்டன கோஷம் எழுப்பினார். கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள், குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் என்.ஐ.ஏ. வுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். மாவட்ட செயலாளர் ஆசாத் நன்றி கூறினார்.
அதேபோல் முது குளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட துணைதலைவர் மீரான் முகைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நூருல் அமீன், உமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் கன்சூல் மஹிரிபா, மாவட்ட பொருளாளர் ஹமீது சுல்தான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாமுகமது, மாவட்ட பொதுச்செயலாளர் பஞ்சுபீர் முன்னிலை வகித்தனர்.
தொகுதி தலைவர் ரசீது கான் வரவேற்றார். மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில், மாவட்ட தொண்டரணி தலைவர் பஹிம், மாவட்ட செயலாளர் காஜா மொய்தின், முகமது ஆரிப், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் சுல்தான் நன்றி கூறினார்.
இது தொடர்பாக மாநில துணைத்தலைவர் அப்துல்ஹமீது கூறுகையில், வெகுஜன மக்களுக்காக போராடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதற்கு தமிழக மக்களும், மதசார்பற்ற அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
பேட்டியின்போது கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டணம் ரியாஸ்கான், பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், கிழக்கு மாவட்ட ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்