search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்ககை"

    • நகரை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பல வகை பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
    • நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்குள் பாம்புகள் நநுழைந்தால் உடனடியாக தீயணைப்புத்துறை, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நகரப்பகுதி, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் பாம்புகள் ஏராளமாக உள்ளன. சாரை பாம்பு துவங்கி, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மலைப்பாம்பு என விஷமுள்ள, கொடிய விஷம் நிறைந்த பாம்புகள் என அனைத்து வகை பாம்புகளும் ஆங்காங்கே உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பிற இடங்களில் காணப்படுகின்றன.

    இவை அவ்வப்போது அருகேயுள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்குள் நுழைந்துவிடுவது வழக்கம்.தகவலறியும் தீயணைப்புத்துறை, வனத்துறையில் பயிற்சி பெற்ற வீரர்கள், பாம்புகளை பிடித்து செல்கின்றனர். அதேபோல் பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் பலரும், பாம்புகளை பிடித்து, வனத்துறையினரின் ஒப்புதலுடன் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ்கிருஷ்ணன் கூறியதாவது:-

    சாரை பாம்பு துவங்கி கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மலைப்பாம்பு என விஷமுள்ள, கொடிய விஷம் நிறைந்த, விஷமில்லாத பாம்புகள் என அனைத்து வகை பாம்புகளும் ஆங்காங்கே உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பிற இடங்களில் காணப்படுகின்றன. இவை அவ்வப்போது அருகேயுள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்குள் நுழைந்துவிடுவது வழக்கம்.

    தற்போது மழைக்காலம் என்பதால், பாம்புகள் அதிக அளவில் தென்படும். பாம்புகளை மனிதர்கள் சீண்டாத வரை பாம்பு மனிதர்களை எதுவும் செய்யாது. இருப்பினும், கண்ணில் தென்படும் பாம்பு, விஷத்தன்மை உள்ளதா, விஷத்தன்மை இல்லாததா என்ற அடிப்படை புரிதலை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    உதாரணமாக கண்ணாடி விரியன் பாம்பு மிகுந்த விஷத்தன்மை கொண்டது. அந்த பாம்பு சீண்டினால், உடனடியாக மரணம் நிகழும் அளவுக்கு அதன் விஷம் வேகமாக உடலில் பரவும். கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்தனர்.

    இதுபோல் கண்ணில் தென்படும் பாம்புகளை அடையாளம் கண்டு அவற்றின் பண்புகளை அறிந்து கொள்ள வேண்டும். குடியிருப்பு பகுதிக்கு பாம்புகள் நுழையும் போது, அதுகுறித்த தகவலை வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். விஷத்தன்மை நிறைந்த பாம்பு எனில் சற்று தொலைவில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    தற்போது மழைக்காலம் என்பதால் வீடுகளை சுற்றி புதர்செடிகள் அதிகம் வளரும். அங்கு பாம்புகள் தங்குவதற்கு வாய்ப்புண்டு. எனவே சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற சில இளைஞர்களும், ஆங்காகே பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கு செல்லும் பாம்புகளை பிடிக்கின்றனர். அந்த தகவலை வனத்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×