search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊர்வசி அமிர்தராஜ்"

    • வெள்ளைக்காரர்களை விரட்டியடித்த காங்கிரஸ் இனி பாரதிய ஜனதாவை விட்டுவைக்காது என எம்.எல்.ஏ. பேசினார்.
    • ஆறுமுகநேரி முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் மற்றும் திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. வட்டார தலைவர் சற்குரு தலைமை தாங்கினார். நகர தலைவர் ராஜாமணி வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்திய பாரதிய ஜனதா தனது ஆட்சியின் அவலங்களை மறைக்க ராகுல்காந்தி மீது பொய்யான வழக்கை போட்டு மாபெரும் தவறை செய்து கொண்டிருக்கிறது. இதன் எதிர் விளைவை அவர்கள் உணரக் கூடிய நிலை சீக்கிரம் வரும்.

    வெள்ளைக்காரர்களை விரட்டியடித்த காங்கிரஸ் இனி பாரதிய ஜனதாவை விட்டுவைக்காது. நாடு பிளவுபடாமல் தடுக்க அனைத்து மக்களும் ஒன்றுபட்டு காங்கிரசை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து ஆறுமுகநேரி முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.இதனை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முதியோர் இல்ல நிர்வாகிகள் பிரேம்குமார், ஷேக்னா லெப்பை, இ.சி.ஐ. சேர்மன் அந்தோணி, சேகர தலைவர்கள் ஆறுமுகநேரி சுதாகர், மடத்துவிளை சிமியோன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் சந்திரசேகரன், மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் வேல் ராமகிருஷ்ணன், ஓ.பி.சி. பிரிவு தலைவர் ராஜகுமார், மாவட்ட மனித உரிமை தலைவர் ராஜகுமாரன்,

    மாவட்ட துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், நகர காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சிவகணேசன், சுந்தரகுருசாமி, நகர செயலாளர் மாடசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆல்வின் சேகர், மகளிர் காங்கிரஸ் தலைவர் பெனிட் ராணி, காங்கிரஸ் தியாகிகள் வாரிசு மாநில துணைத்தலைவர் தவசிமுத்து,

    வட்டார செயலாளர்கள் சாலமோன் ஜெபராஜ், மோகன், முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், வார்டு செயலாளர்கள் சுடலைமணி, முருகேசன், சிவபெருமாள், பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×