search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக வெறிநோய் தினம்"

    • செல்லப்பிராணிகள் பிறந்த 90 நாளில் இருந்து முதல் வெறிநோய் தடுப்பு ஊசி போட வேண்டும்
    • தடுப்பு ஊசிகளை செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக பொதுமக்கள் போட்டுக்கொள்ளலாம் என்றார்.

    நாகர்கோவில் :

    உலக வெறிநோய் தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பு முகாம் இன்று பொருட்காட்சி திடலில் நடந்தது.

    தடுப்பூசி முகாமை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாரிவேந்தன் முன்னிலை வகித்தார். அங்கு வந்த நாய்களுக்கு டாக்டர் சன்மதி தடுப்பூசி போட்டார். தடுப்பூசி முகாம் குறித்து டாக்டர் பாரிவேந்தன் கூறியதாவது:-

    ரேபிஸ் கொடிய நோய், ரேபிஸ் மனிதர்களையும், விலங்குகளையும் தாக்கும் ஒரு கொடிய நோய். தீர்க்க இதுவரையிலும் சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கவில்லை. இந்நோய் தாக்கிய மனிதர்களோ, விலங்குகளோ 100 சதவீதம் உயிரிழப்பது உறுதி. நோய் வரும் முன் பாதுகாக்க வேண்டும். நம் செல்லப்பிராணிகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை வெறிநோய் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். செல்லப்பிராணிகள் பிறந்த 90 நாளில் இருந்து முதல் வெறிநோய் தடுப்பு ஊசி போட வேண்டும். கடந்த காலங்களில் நாய் கடி பாதிப்புகள் அதிக அளவில் இருந்தது. தற்போது மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு உள்ளது. இதனால் பாதிப்புகள் குறைந்துள்ளது.

    மருத்துவமனைகளில் நாய் கடி மருந்துகள் போதிய அளவு இருப்பு உள்ளது. உலக வெறிநோய்தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் 12 இடங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தவிர மற்ற நாட்களில் அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் வெறிநோய் தடுப்பு ஊசிகளை செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக பொதுமக்கள் போட்டுக்கொள்ளலாம் என்றார்.

    • பாண்டமங்கலத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 70-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் கால்நடை மருந்தகத்தில் உலக வெறிநோய் தினத்தினை முன்னிட்டு நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்களுக்கான இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    திருச்செங்கோடு கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மருத்துவர் அருண்பாலாஜி தலைமையில் நடைபெற்ற முகாமை கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் கலந்துகொண்டு தொடங்கி வைத்து, தடுப்பூசி போடப்பட்டதற்கான செல்லப்பிராணிகள் நல அட்டைகளை வழங்கினார்.

    முகாமில் 70-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் அனைத்து நாய்களுக்கும் குடற்புழு நீக்க மருந்துகளும் வழங்கப்பட்டன.

    இதில் பாண்டமங்கலம் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் தனவேல், மருத்துவர் தரணிதரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுரேஷ், தடுப்பூசி பணியாளர் சுந்தரமூர்த்தி, உதவியாளர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×