search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பூசி முகாம்கள்"

    • செல்லப்பிராணிகள் பிறந்த 90 நாளில் இருந்து முதல் வெறிநோய் தடுப்பு ஊசி போட வேண்டும்
    • தடுப்பு ஊசிகளை செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக பொதுமக்கள் போட்டுக்கொள்ளலாம் என்றார்.

    நாகர்கோவில் :

    உலக வெறிநோய் தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பு முகாம் இன்று பொருட்காட்சி திடலில் நடந்தது.

    தடுப்பூசி முகாமை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாரிவேந்தன் முன்னிலை வகித்தார். அங்கு வந்த நாய்களுக்கு டாக்டர் சன்மதி தடுப்பூசி போட்டார். தடுப்பூசி முகாம் குறித்து டாக்டர் பாரிவேந்தன் கூறியதாவது:-

    ரேபிஸ் கொடிய நோய், ரேபிஸ் மனிதர்களையும், விலங்குகளையும் தாக்கும் ஒரு கொடிய நோய். தீர்க்க இதுவரையிலும் சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கவில்லை. இந்நோய் தாக்கிய மனிதர்களோ, விலங்குகளோ 100 சதவீதம் உயிரிழப்பது உறுதி. நோய் வரும் முன் பாதுகாக்க வேண்டும். நம் செல்லப்பிராணிகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை வெறிநோய் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். செல்லப்பிராணிகள் பிறந்த 90 நாளில் இருந்து முதல் வெறிநோய் தடுப்பு ஊசி போட வேண்டும். கடந்த காலங்களில் நாய் கடி பாதிப்புகள் அதிக அளவில் இருந்தது. தற்போது மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு உள்ளது. இதனால் பாதிப்புகள் குறைந்துள்ளது.

    மருத்துவமனைகளில் நாய் கடி மருந்துகள் போதிய அளவு இருப்பு உள்ளது. உலக வெறிநோய்தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் 12 இடங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தவிர மற்ற நாட்களில் அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் வெறிநோய் தடுப்பு ஊசிகளை செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக பொதுமக்கள் போட்டுக்கொள்ளலாம் என்றார்.

    • குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது
    • 4 தாலுகாக்களிலும் துணை தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க ப்பட்டு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யும் என்பதால் வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. முதல் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்டும் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது. 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று குறைவாகவே பெய்து உள்ளது. நேற்று 4.9 சென்டி மீட்டர் மழை சராசரியாக மாவட்டத்தில் பதிவாகி உள்ளது. அணைகளின் நீர்மட்டத்தையும் கண்காணித்து வருகிறோம்.

    பேச்சிப்பாறை அணை 38 அடியாகவும் பெருஞ்சாணி அணை 63 அடியாகவும் சிற்றாறு-1,சிற்றார்-2அணைகள் 12 அடியாகவும் உள்ளது. மலையோர பகுதிகளில் மழை பெய்தாலும் உடனடி யாக அணைகளில் இருந்து தண்ணீரை திறக்க வாய்ப்பு இல்லை. அணைகளில் தண்ணீரை சேகரித்து வைக்கலாம்.

    ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதன் காரணமாக அருவியல் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பேரிடர் மீட்பு குழுவி னர் இன்று வருகை தந்து உள்ளனர். அதிக மழை பெய்யும் என்பதால் பள்ளி களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. மக்கள் மழை நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.ஆறுகளில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    கடந்த ஆண்டு பெய்த மழையின் போது ஆறுகளில் குளித்த போது தான் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இழப்புகளை தடுக்க பொது மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் 76 இடங்கள் தாழ்வான பகுதி களாக கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 22 இடங்கள் மிகவும் தாழ்வான பகுதி களாகும். அகஸ்தீஸ்வரம் தாலுகாவில்2 இடங்களும், தோவாளையில் 4 இடங்க ளும், கல்குளத்தில் ஒரு இட மும், குருந்தன் கோட்டில் 3 இடங்களும், திருவட்டா ரில்7 இடங்களும், கிள்ளி யூரில் 5 இடங்களும் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்ப ட்டுள்ளது.

    அந்த பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களை தற்காலிக முகாம்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்து உள்ளோம். இதற்காக தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    அகஸ்தீஸ்வரம் தாலுகா வில் 12 இடங்களும் தோவா ளையில் 7 இடங்களும், கல்குளத்தில் 4 இடங்களும் குருந்தன் கோட்டில் 9 இடங்களும் திருவட்டாரில் 7 இடங்களும் கிள்ளியூரில் 11 இடங்களும் தயார் நிலை யில் வைக்கப்பட்டு உள்ளது.

    4 தாலுகாக்களிலும் துணை தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க ப்பட்டு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பி.ஏ.4, பி.ஏ.5 தொற்று மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்.
    • பொது இடங்களில் கூடுபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

    நாவலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் கொரோனா தொற்றின் காரணமாக வீட்டு தனிமையில் உள்ளவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

    தமிழகத்தில் யாருக்கும் ஆக்சிஜன் தேவையோ அல்லது தீவிர சிகிச்சை தேவையோ என்ற அளவிலான பாதிப்புகள் இல்லை. என்றாலும் இப்போது பி.ஏ.4, பி.ஏ.5 என்ற தொற்று மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டாலும் அந்த குடும்பத்தில் இருக்கிற ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் பாதிக்கிறது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பொது இடங்களில் கூடுபவர்கள் அவசியம் முக கவசம் அணிய வேண்டும். முககவசங்கள் அணிந்து கொள்வதன் மூலமே தொற்றின் பாதிப்புகளில் இருந்து நம்மை மீட்டு கொள்ள முடியும்.

    முதல் தவணை தடுப்பூசி பாக்கியிருப்பவர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி பாக்கியிருப்பவர்களுக்காகவும், தினந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார - மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

    24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படுகிற வகையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஜூலை மாதம் 10-ந்தேதி 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.

    இந்த தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி பொதுமக்கள் கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இது நம்மை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல, நமக்கு வந்தால் நமது குடும்பத்தாரையும், ஒட்டுமொத்தமாக அக்கம் பக்கத்தில் இருக்கிற அனைவரையுமே பாதிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×