search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்கள் தாக்குதல்"

    ஆம்பூரில் குடும்ப தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பார்த்திபன் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது உறவினர் திருத்தணியை சேர்ந்த காணிக்கைராஜ். இன்று காலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த காணிக்கைராஜ் கல்லால் பார்த்திபனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பார்த்திபனை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பார்த்திபன் இறந்தார்.

    உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது காணிக்கைராஜ் தாக்கியதில் பார்த்திபன் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பார்த்திபன் கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பார்த்திபனை தாக்கிய காணிக்கைராஜ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×