search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிர்பலி"

    • வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
    • உயிர் பலி ஏற்படும் என்ற அபா யத்துடன் தினந்தோறும் வாகன ஓட்டிகள் இருந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை ரூ. 30 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை ஒருபுறம் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெ ற்று வருவதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சாலை ஓரத்தில் தோண்ட ப்பட்ட பள்ளங்கள் அருகா மையில் பாதுகாப்பு உபகர ணங்கள் இல்லாத தால் எப்பொழுது விழுந்து விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் என்ற அபா யத்துடன் தினந்தோறும் கார், வேன், பஸ், இருசக்கர வாகன ஓட்டிகள் இருந்து வருகின்றனர்.

    மேலும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக் கொண்டு வரும் மாட்டு வண்டிகள், டிராக்டர் போன்றவற்றால் ஒருபுறம் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காண ப்பட்டதோடு நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பு இருந்து வருகின்ற து. இதன் காரணமாக வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்றவற்றை போக்குவர த்து நெரிசலில் சிக்கி கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.மேலும் நெடுஞ்சாலை த்துறையினர் எந்தவித முன் ஏற்பாடுகள் செய்யாமல் அலட்சியமாக இருந்து வருவதால் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வரக்கூடிய கனரக வாக னங்கள் களிஞ்சிக்குப்பம் சாலை , கஸ்டம்ஸ் சாலை வழியாக கடலூருக்கு செல்வதற்கு போலீசார் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த போக்குவரத்து பாதிப்பு மற்றும் உயிர்பலி ஏற்படக்கூடிய நிலையில் பணிகள் நடைபெற்று வருவதால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உயிர்பலி வாங்க காத்திருக்கும் மதுரை மேலவாசல் சாலையை அதிகாரிகள் கவனிப்பார்களா?
    • அதிகாரிகள் இனியும் மெத்தனம் காட்டா மல் சாலை சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சாலை புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரியார் பஸ் நிலையமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகள் நடந்தது. காம்ப்ளக்ஸ் பஸ் நிலைய வணிக வளாகம் கட்டும் பணி தற்போது வரை ஆமை வேகத்தில் நடக்கின்றன.

    பஸ் நிலைய திட்ட பணிகளின் போது மழை நீர் வடிகால் திட்டத்திற்கு போதிய அளவு முக்கியத்து வம் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது‌. இதனால் நகரில் பெய்த ஒரு மழைக்கே பெரியார் பஸ் நிலையம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. வடிகால் வசதி எதுவும் இல்லாததால் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கும் அவல நிலை உள்ளது.

    உயிர்ப்பலி

    இதேபோல் முக்கிய சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக நகரின் மையப் பகுதியில் பெரியார் பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் உள்ள மேலவாசல் சாலை மோசமாக உள்ளது. முத்து பாலத்தில் இருந்து பெரிய பஸ் நிலையத்துக்கு வரும் வாகனங்கள் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பள்ளத்தில் இறங்கி விபத்தில் அடிக்கடி சிக்கு கிறது.

    குறிப்பாக மோட்டார் சைக்கிளில் தங்களது குடும்பத்துடன் வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பதை அறியாமல் வேகமாக வருவதால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்து ஏற்படுகிறது.

    மேலவாசல் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் எதிரில் சாலைகள் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது இவை எந்நேரமும் விபத்தை ஏற்படுத்தி உயிர்பலி வாங்கும் நிலையில் உள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் இந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி முன்வரவில்லை.

    எனவே அதிகாரிகள் இனியும் மெத்தனம் காட்டா மல் சாலை சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×