search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உப்புமா"

    • காலையில் செய்ய தோசை மீந்து விட்டால் மாலையில் இந்த ரெசிபியை செய்யலாம்.
    • 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    கல் தோசை - 4

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    கறிவேப்பிலை - தேவைக்கு

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 3

    கொத்தமல்லி - தேவைக்கு

    உப்பு - சுவைக்கு

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை

    கல் தோசையை சிறிய துண்டுகளாக பிய்ந்து வைக்கவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் பிய்ந்து வைத்துள்ள தோசையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

    மசாலாவுடன் தோசை நன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தோசை உப்புமா ரெடி.

    • அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது.
    • நீரிழிவு நோயாளிகள் பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    அவல் - முக்கால் ஆழாக்கு

    காய்ந்த மிளகாய் - 2

    தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்

    கடுகு - கால் ஸ்பூன்

    பெரிய வெங்காயம் - 1

    முந்திரிப் பருப்பு - 4 உடைத்தது

    செய்முறை

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாகத் தண்ணீரில் களைந்து, ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊறவைக்கவும். பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும்.

    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் உடைத்த முந்திரி இவற்றைப் போட்டு வறுத்து பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து ஊற வைத்த அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    பின்னர் துருவிய தேங்காயையும் சேர்க்கவும்.

    இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி.

    இந்த உப்புமாவை சர்க்கரையுடனோ அல்லது சட்னியுடனோ உண்டால் சுவை மிகுதியாக இருக்கும்.

    ×