search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபயோகிக்க வேண்டாம்"

    • மழை பெய்யும் நேரங்களில் மின் சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.
    • கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. எனவே மழை பெய்யும் நேரங்களில் மின் சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும் என மின்வாரியத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

    மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்ன ரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். மின் கசிவு தடுப்பானை பயனீட்டா ளரின் இல்லங்க ளில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்க்க லாம்.

    உடைந்த சுவிட்சு களையும், பிளக்குகளையும் உடனே மாற்றிவிட வேண்டும். பழுதுபட்ட மின் சாதனங்களை உபயோகிக்க க்கூடாது. கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது.

    ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு போடுவதுடன் அதனை குழந்தைகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.

    5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டின் வயரிங்குகளை சோதனை செய்து தேவை ப்பட்டால் மாற்றிக்கொ ள்ளலாம். குளியல் அறை யிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொரு த்தக்கூடாது.

    சுவற்றின் உள்பகுதியில் மின்சாரத்தை எடுத்து செல்லும் வயர்களுடன் கூடிய பி.வி.சி.பைப்புகள் பதிக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடை களை கட்டக்கூடாது.

    மின் கம்பங்களை பந்த ல்களாக பயன்ப டுத்தக்கூ டாது. மேலும் அதன் மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. மழை காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது.

    மழையாலும், பெருங்காற்றா லும் அறுந்து விழுந்த மேல்நிலை மின் கம்பி அருகே செல்ல வேண்டாம். இது குறித்து உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இடி - மின்னலின்போது தஞ்சம் அடைய எதுவும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான இடத்திற்கு செல்ல வேண்டும்.

    மேலும் இடி-மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன் படுத்தக்கூடாது.

    மழை காலங்களில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தாலோ, மின் கம்பி அறுந்து விழுந்தாலோ மற்றும் மின் வாரிய தொடர்பான தகவலுக்கு 9498794987, 9445851912 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்ற மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×