search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ."

    • முட்டத்தில் இன்று மாலை நடக்கிறது
    • 2 அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்

    நாகர்கோவில்:

    புதுடெல்லியில் 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி 40 நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் ஒன்று கூடினர்.

    சூழலியல் மாற்றங்கள் அரசு கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் கடல் மாசு அடைதலால் மீன்வளம் குறைதல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் குரல் கொடுக் கும் வகையிலும் மீனவ மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யிலும் அன்று முதல் ஆண்டுதோறும் நவம்பர் 21-ந் தேதி மீனவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு 25-வது வெள்ளி விழா கொண்டாட் டமாக உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மீனவர் தினத்தை குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராம மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மீனவர் தினம் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான மீனவர் தினவிழா கொண் டாட்டம் முட்டம் கடற்கரை மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்குகிறார். முட்டம் துணைத்தலைவர் சகாயராஜ், மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின், தாரகை கட்பட் ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள். முட்டம் பங்கு தந்தை அமல்ராஜ் வரவேற்று பேசுகிறார்.

    கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்டன் தொடக்க உரை யாற்றுகிறார். விழாவில் தி.மு.க. இளைஞரணி செய லாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்று கிறார்கள்.

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி, கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், தமிழ்நாடு மாநில தலைமை மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முட்டம் ஊராட்சி தலைவர் நிர்மலா ராஜ், அருள் எழிலன், ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், தளவாய்சுந்தரம், விஜய தரணி, ராஜேஷ்குமார், எம்.ஆர். காந்தி, மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியூஸ் முன்னாள் மீனவர்கள் செயலாளர் நசரேத் பசலியான், உள் நாட்டு மீனவர் அமைப் பின் இயக்குனர் ஜோஷ் ஆகியோர் கலந்து கொள் கிறார்கள். உள்நாட்டு மீனவர்அமைப்பு இயக்குனர் வெனிஸ் மைக்கேல்ராஜ் நன்றி கூறுகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளை சர்ச்சில், குறும்பனை பெர்லின், நாஞ்சில் மைக்கேல் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

    • இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்
    • உதயநிதி ஸ்டா லின் எம்.எல்.ஏ. விற்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை வழங்கினார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம். எல்.ஏ. சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்தார்.

    நேற்று இரவு அங்கு தங்கிய அவர் இன்று காலை காரில் புறப்பட்டு குமரி மாவட்டம் வந்தார். உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு குமரி மாவட்ட எல்லையான காவல்கிணற்றில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வை வரவேற்றார்.

    கிழக்கு மாவட்ட செயலா ளரும், நாகர்கோவில் மாநக ராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உதயநிதி ஸ்டா லின் எம்.எல்.ஏ. விற்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை வழங்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்று கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். இரு சக்கர வாக னத்தில் நிர்வாகிகள் முன் செல்ல உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அழைத்து வரப்பட்டார்.

    20 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரை தி.மு.க. நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் எழுச்சிமிகு வரவேற்புடன் அழைத்து வந்தது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, சதாசிவம், துணைச்செயலாளர் பூதலிங்கம், மாநகரச் செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் பாபு, சுரேந்திர குமார்.

    இளைஞர் அணி துணை அமைப்பாளர் எட்பெர்க், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜெகன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் சிவ பெருமான், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என். சங்கர், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர்,மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கராஜா, சுப்பிரமணியம்,அமல செல்வன், கன்னியாகுமரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், குமரி மாவட்ட தலைவர் டேவிட்சன், முன்னாள் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நசரேத் பசிலியான், ஸ்டாலின் பிரகாஷ், குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் சுஜின் ஜெகேஷ், குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், நகர செயலாளர் நாகூர்கான், மணவாளக்குறிச்சி தி.மு.க. பேரூர் செயலாளர் பாம்பே கண்ணன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் ஜூடுசேம், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், திருவட்டாா ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் ஐ.ஜி.பி. ஜாண்கிறிஸ்டோபர், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பிரிட்டோசேம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×