search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடையார்"

    • உடையார் பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • நாளை (திங்கட்கிழமை) முதல் 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கீழக்கடையத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது உடையார் பிள்ளையார் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் புராணச் சிறப்பு கொண்ட கோவிலாகும். அகஸ்திய ரால் வழிபடப்பட்ட பெரு மை வாய்ந்த ஆலயமாகும்.

    இந்த கோவிலுக்கான கும்பாபிஷேத்திற்காக கடந்த 10-ந்தேதி கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா ஹோமம், பிரம்மசாரி பூஜை, கோ பூஜை, கஜபூஜை, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

    பின்னர் பாபநாசத்தி லிருந்து 108 தீர்த்த குடம் கொண்டு வரப்பட்டது.இதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் சிலை நிறுவுதல் நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலையில் மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, கண்திறப்பு, தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து விமான கோபுர கும்பாபிஷேகம், உடையார் பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நாளை திங்கட்கிழமை முதல் 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை 18 பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் யு.சி.சி நண்பர்கள் செய்துள்ளனர்.

    ×