என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உடுமலை உழவர் சந்தை"
- உழவர் சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
- ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர்.
உடுமலை :
உடுமலை உழவர் சந்தைக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர்.
உழவர் சந்தை அமைந்துள்ள கபூர்கான் வீதியில், போதிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலையில், நேற்று முன்தினம் பெய்த சிறிய அளவிலான மழைக்கு கூட தாங்காமல் வெள்ள நீர் தேங்கியுள்ளது.குண்டும், குழியுமான ரோட்டில் பல இடங்களில் குளம் போல், மழை நீர் தேங்கியுள்ளது. அதே போல் உழவர் சந்தை நுழைவாயில் மற்றும் வளாகத்திலும் மழை நீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு காணப்படுகிறது.வளாகத்தில், குறைந்த அளவே கடைகள் உள்ள நிலையில் பெரும்பாலான விவசாயிகள் வளாகத்தில் தரையில் வைத்தே காய்கறிகள் விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதனால் காய்கறிகள் மண், சேறு என பாதிப்பதோடு, வளாகத்திற்குள் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அங்கு வரும் மக்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே, உழவர் சந்தை ரோட்டில் மழை நீர் வடிகால் வசதி மற்றும் குண்டும், குழியுமான ரோட்டை சரி செய்யவும், உழவர் சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்காமலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்