search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடலை வாங்க மறுத்து"

    • பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு ஹரிசங்கர் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் ரவி. இவரது மகன் ஹரிசங்கர் (வயது 17). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் உணவு மற்றும் கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஹரிசங்கர் லேத் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசபட்டார். சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட ஹரிசங்கர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தார்கள். ஹரிசங்கர் சாவுக்கு காரணமா னவர்களை கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர்.

    இதனைத்தொடர்ந்து ஹரிசங்கர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    உரிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வேலை வாங்கிய லேத் உரிமையாளரை கைது செய்ய கோரி சிவகிரி போலீஸ் நிலையம் முன்பு ஹரிசங்கர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வந்த ஹரிசங்கர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

    இதனையடுத்து நேற்று மாலை பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு ஹரிசங்கர் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் தலைமையான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்று உறவினர்கள் கலந்து சென்றனர்.

    இந்நிலையில் இதுவரை மாணவர் ஹரிசங்கர் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி வருகின்றனர்.

    இதனால் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு குவிக்கப் பட்டுள்ளனர். 

    ×