search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மாவட்டத்தில் இன்று"

    • வெ ள்ளோடு அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • அமைச்சர் சு.முத்துசாமி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மா ணவிகளுக்கு அனைத்து பள்ளி நாள்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் செ யல் படுத்தப்பட்டு வருகிறது.

    முதல்கட்டமாக மாநகரா ட்சி மற்றும் கிராமப்புறங்கள், மலைக் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்ப ட்டது. மாணவர்கள், பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திட்டம் படிப்படியாக தமிழ கம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    அதன்படி இன்று (25-ந் தேதி) முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்த ப்பட்டது.

    அதனடிப்படையில் ஈரோடு மாவட்டம், சென்னிம லை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெ ள்ளோடு அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், "இத்திட்டமானது முதல்கட்டமாக ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் மலைக்கி ராமங்களில் உள்ள தொடக்க ப்பள்ளிகள் என 96 பள்ளிகளில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் 8 ஆயிரத்து 903 மாணவ, மா ணவிகள் பயன்பெற்று வருகி ன்றனர். இந்நிலையில் மாவ ட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் இன்று முதல் விரிவுபடுத்தப்ப ட்டுள்ளது.

    இதன்மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 983 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 42 ஆயிரத்து 848 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,079 அரசு தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 51 ஆயிரத்து 751 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்" என்றார்.

    இந்த நிகழ்ச்சியில், கலெ க்டர் ராஜகோபால் சுன்கரா, துணை கலெக்டர் மணீஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, சென்னி மலை ஊராட்சி ஒன்றியத் தலைவர் காயத்திரி இளங்கோ மற்றும் கல்வித்துறை அலுவ லர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொ ண்டனர்.

    ×