search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில்"

    • பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.
    • வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் செல்லும் வகையில் நாளை முதல் மாற்றி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் உள்ள சாலையில் மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்த பகுதியில் ஜவுளி, நகைக்கடை, சாலையோர வியாபாரிகள் அதிகம் உள்ளனர். பொதுமக்கள், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் அதிகம் கூடுவதால் நெருக்கடியாக உள்ளது.

    இப்பகுதியில் பாதசாரிக ள் சாலையை கடக்கும்பே ாது விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.

    இந்த சாலையி ல் போக்கு வரத்தை குறை க்கு ம் வகையில் இந்த சாலை சந்திப்பு வாகன ங்களும், பாதசாரிகளும் பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் வாகன போக்குவரத்தை சோதனை அடிப்படையில் தற்காலி கமாக மாற்றி அமைக்க மா வட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் முடிவு செய்துள்ளது.

    இதற்காக திருவேங்கடம் வீதிக்கு பிரதான சாலையில் இருந்து வடக்கு நோக்கி மட்டும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் செல்லும் வகையில் நாளை (புதன்கி ழமை) முதல் மாற்றி அமை க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    மறுவழியில் வரும் வாக னங்கள், ஈஸ்வரன் கோவில் வழியாக மீனாட்சி சுந்தர னார் சாலையில் இணைய லாம். அல்லது மணிக்கூண்டு சந்திப்பினை கடந்து பெரி யார் மன்றம் சந்திப்பின் வழியாக பன்னீர்செல்வம் பூங்காவை அடையலாம்.

    எனவே பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×