search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு காவிரி சாலையில்"

    • காவிரி சாலையில் ரோ ட்டில் நடுவில் தொடர்ந்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
    • இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு காவிரி சாலை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.

    இந்த சாலை வழியாக தான் ஈரோட்டில் இருந்து சேலம் மற்றும் சென்னைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் சென்று வருகின்றன.

    அதேப்போல் சேலம், சென்னையில் இருந்து இந்த வழியாக தான் ஈரோடுக்கு பஸ்கள் வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த பகுதியில் சாலை இருபுறமும் நூற்றுக்க ணக்கான நகை, ஜவுளி க்கடைகள், வணிக நிறுவன ங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதேபோல் இந்த பகுதியில் 3 பள்ளிகள் உள்ளன. இதனால் காவிரி சாலை பகுதி எப்போதும் மக்கள் நிறைந்து பரபர ப்பாக காட்சி அளிக்கும்.

    இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகள் நடந்து சேதமடைந்த ரோடுகள் சரி செய்யப்பட்டு புதிதாக தார் சாலை அமை க்கப்பட்டுள்ளது.

    இந்நிலை யில் சாலை நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்புகள் வைக்கப்ப ட்டன. அதாவது காவிரி சாலை கிருஷ்ணா தியேட்டர் முதல் வாய்க்கால் பாலம் வரை சாலையின் நடுவே தடுப்பு கள் அமைக்க ப்பட்டுள்ளன.

    இதில் காந்தி சிலை அருகே தடுப்புகள் இடைவெ ளி இன்றி உள்ளது. இந்த பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இதேப்போல் அல் அமீன் ஸ்கூல் மற்றும் அதன் எதிர்ப்புறம் உள்ள அரசு பள்ளி உள்ளது.

    இந்த பகுதியிலும் தடுப்புகளில் இடைவேளை விடப்பட வில்லை. அங்குள்ள பெ ட்ரோல் பங்க் பகுதிகளிலும் தடுப்புகளில் இடைவெளி வைக்கவில்லை.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த பகுதியை கடக்க நீண்ட தூரம் சுற்றி வர வேண்டி உள்ளதாக கூறியுள்ளனர்.

    இது குறித்து 40-வது வார்டு கவுன்சிலர் வக்கீல் ரமேஷ் குமார் கூறும்போது,

    ஈரோடு மாநகராட்சியின் முக்கிய போக்குவரத்து பகுதியாக காவிரி சாலை உள்ளது. இந்த பகுதியில் 3 பள்ளிகள், நூற்றுக்கணக்கான ஜவுளி, நகை கடை கள், தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காவிரி சாலையில் ரோ ட்டில் நடுவில் தொடர்ந்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

    காந்தி சிலை அருகே, அல் அமீன் ஸ்கூல், அரசு பள்ளி மற்றும் பெட்ரோல் பங்க் பகுதிகளில் மட்டும் தடுப்புகளில் இடைவெளி விட வேண்டும் என கோரி க்கை வைக்கின்றோம்.

    ஏனென்றால் இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர இது பயனு ள்ளதாக இருக்கும். இல்லையெ ன்றால் நீண்ட தூரம் அவர்கள் சுற்ற வேண்டியிருக்கும்.

    பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த பகுதிகளில் தடுப்புகளில் இடைவெளி விட வேண்டும். இதேபோல் இங்கு அரசு பள்ளி மற்றும் எதிரில் அல் அமீன் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ ர்கள் பெற்றோர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் போக்குவரத்து போலீசார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.

    ×