search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈடுபட முயன்ற"

    • ஒரு வாலிபர் அவரிடம் வந்து உன்னிடம் பணம் இருந்தால் கொடு என்று கேட்டுள்ளார்.
    • இதற்கு பூவேந்தன் என்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்து உள்ள சின்ன மடத்து பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பூவேந்தன் (வயது 28). இவர் பெருந்துறை பகுதியில் இருசக்கர வாகன டீலர் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் சரளை சென்று விட்டு பெருந்துறை வந்து கொண்டி ருந்தார். பெருந்துறை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது அவருக்கு போன் வந்தது. இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு போன் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் வந்து உன்னிடம் பணம் இருந்தால் கொடு என்று கேட்டுள்ளார். இதற்கு பூவேந்தன் என்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதையடுத்து அந்த வாலிபர் அவரை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் அந்த வாலிபர் ஏற்கனவே என் மேல கொலை வழக்கு உள்ளது. பணம் கொடுக்க வில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி யதாகவும் கூறப்படுகிறது.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பூவேந்தன் சத்தம் போட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து விசாரித்தனர்.

    இது குறித்து பூவேந்தன் பெருந்துறை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். பெருந்துறை சப்-இன்ஸ்பெ க்டர் வெங்கடாஜலம் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை பிடித்து விசா ரணை நடத்தினார்.

    இதில் அவர் விஜய மங்கலம் சேரன் நகரை சேர்ந்த மணிகண்டன் (26) என தெரிய வந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மணிகண்டன் சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • இந்து முன்னணியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர் தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
    • இதை அடுத்து இந்து முன்னணி கட்சியினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    ஈரோடு:

    சினிமா சண்டை இயக்குனர் கனல் கண்ணன் சமீபத்தில் பெரியார் குறித்து சர்ச்சை கருத்து கூறினார். இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

    இந்த கைதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்ப ட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

    எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இந்து முன்னணியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர் தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர்.

    ஆனால் அதையும் மீறி இந்து முன்னணி கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதை அடுத்து இந்து முன்னணி கட்சியினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா, ஸ்வஸ்திக் கார்னர், கருங்கல்பாளையம் காளை மாட்டு சிலை, மரப்பாலம் சோலார் போன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×