search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈங்கூர்"

    • முட்புதரில் பெட்டி, பெட்டியாக ஆங்கில மருத்து கொட்டப்பட்டுள்ளது.
    • தனியார் மருந்து விநியோக நிறுவனம் சார்பில் இப்படி கொட்டப்பட்டதா என தெரியவில்லை.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், ஈங்கூர் ஊராட்சி, சிப்காட் பொது சுத்திரிப்பு நிலையம் அருகே குட்டப் பாளையத்தில் இருந்து குமாரபாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் முட்புதரில் பெட்டி, பெட்டியாக ஆங்கில மருத்து கொட்டப்பட்டுள்ளது.

    இது ஒரே இடத்தில் இல்லாமல் விட்டு, விட்டு 4 இடங்களில் கொண்டப்பட்டுள்ளது. இதில் பாதி மருந்துகள் காலவதியானது. மீதி மருந்துகள் இன்னும் காலாவதி தேதி உள்ளது. இது அரசு மருத்துவனைக்கு வழங்கப்பட்டதா அல்லது ஈ.எஸ்.ஐ. மருத்துவ மனைக்கு அரசால் வழங்கப்பட்டதா அல்லது தனியார் மருந்து விநியோக நிறுவனம் சார்பில் இப்படி கொட்டப்பட்டதா என தெரியவில்லை.

    இதை இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். பள்ளி விடுமுறை தினமாக உள்ளதால் அப்பகுதி சிறுவர்கள் இந்த மருந்து பற்றி அறியாமல் எடுத்து விளையாடி வருகின்றனர்.

    இந்த மருந்துகள் எதற்காக இங்கு கொட்டப்பட்டது. இதை யார் கொண்டு வந்து கொட்டியது என அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

    மேலும் இந்த பகுதியில் சாய ஆலை கழிவு நீரால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி, இங்கு எதற்காக கொட்டப்பட்டது என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    • தண்டவாளம் அமைத்தால் சிப்காட் வளாகத்திற்குள்ளேயே சரக்கு முனையம் ஏற்படுத்த முடியும்.
    • ஈரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும்.

    ஈரோடு:

    பெருந்துறை அடுத்துள்ள சிப்காட் வளாகத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கொச்சி துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலமும், ஈரோடு ரெயில் நிலையம் மூலமும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

    ஈங்கூர் ரெயில்நிலையத்தில் இருந்து சிப்காட்டிற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் விரிவாக்கம் செய்தால் சரக்கு ரெயில்கள் எளிதில் சிப்காட் வளாகத்திற்குள்ளாகவே வந்து சரக்குகளை ஏற்றி இறக்கி செல்ல முடியும்.

    இக்கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக தொழில் துறையினர் மத்திய அரசிடமும், ரெயில்வே நிர்வாகத் திடமும் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் மத்திய அரசும், ரெயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளதால் சிப்காட் வளாகத்தில் இருந்து லாரிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரோடு ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அனுப்ப வேண்டிய நிலை இருந்து வருகின்றது.

    இதனால் போக்குவரத்து செலவு மற்றும் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றது.

    இது குறித்து தொழில் துறையினர் கூறியதாவது:

    சிப்காட் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப் படும் சரக்கு பெட்ட கங்களை ரெயில்களில் ஏற்றி இறக்கி வசதியாக ஈங்கூர் ரெயில் நிலைய த்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் அமைத்தால் சிப்காட் வளாகத்திற்குள்ளேயே சரக்கு முனையம் ஏற்படுத்த முடியும்.

    இது தொடர்பாக பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் ரெயில்வே நிர்வாகம் நிறைவேற்ற முன்வராமல் உள்ளது. இதனால் சரக்குகள் மீதான போக்குவரத்து செலவுதான் அதிகரித்து வருகின்றது.

    குறைந்தபட்சம் ஈங்கூர் ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்து அனைத்து சரக்கு ரெயில் களும் நின்று செல்லும் வகையில் கட்டமைப்பு களை உருவாக்க வேண்டும்.

    இத்திட்டம் நிறைவேற்றப் பட்டால் ஈரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×