search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச பயிற்சி வகுப்பு"

    • 92 பணியிடங்களுக்கு தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • அலுவலக எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் -1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை 25-ந்தேதி தொடங்குகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் துணை கலெக்டர், துணைக் கண்காணிப்பாளா் (காவல் துறை), துணைப்பதிவாளா் (கூட்டுறவு துறை), உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), உதவி ஆணையா் (வணிக வரித் துறை) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் போன்ற 92 பணியிடங்களுக்கு தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இத்தோ்வுக்கு இணையதள முகவரி மூலமாக வரும் ஆகஸ்ட் 22ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    எனவே திருப்பூா் மாவட்டத்தில் டி.என்பிஎஸ்சி .போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்கள் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபா்கள் தங்களது பெயரை 94990-55944 அல்லது 0421-2999152 என்ற அலுவலக எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சியின் இறுதியில் மாதிரி தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் குரூப்- 1 தோ்வு எழுதும் நபா்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் 42 காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 10-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
    • 4 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மற்றும் உத்தமபாளையத்தில் நடைபெற்று வருகின்றது.

    தேனி:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் 42 காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 10-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 8ல் உள்ள 36 காலிப்பணியிடங்களுக்காக செப்டம்பர் 11-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

    மொத்தம் 78 காலிப்பணியிடங்கள் அடங்கிய இத்தேர்வுகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சியின் போது இலவசப் பாடக்குறிப்புகள், ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும். தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி-4 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மற்றும் உத்தமபாளையத்தில் நடைபெற்று வருகின்றது.

    எனவே தொகுதி 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்களும் நேரடி பயிற்சி வகுப்பில் இணைந்து பயிலலாம். மேலும் இவ்வலுவலகத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நூலகத்தை போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • 3552 காவலர் காலி பணியிடங்கள் வெளியீடு
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 2-ம் நிலைக் காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தற்போது நேரடியாக வருகிற 27.07.2022 முதல் நடத்தப்படவுள்ளது.

    இந்த அறிவிக்கையில் 3552 காவலர் பணியிடங்கள் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படவுள்ளது (ஆண்கள் / பொது 2890 பணியிடங்களும், பெண்கள் 662 பணியிடங்களும்) இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10 - ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்துப் போட்டியாளர்களும் பயனடையும் வகையில் நேரடியாக வேலைவாய்ப்புத்துறை சார்பில் சிறந்த பயிற்சி வல்லுனர்களால் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மேலும், http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு எழுதும் போட்டியாளர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது பெயரினை முன்பதிவு செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×