search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Coaching Course"

    • அரசு பள்ளி பிளஸ்-2 மாணவர்களுக்கான நீட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • இந்த பயிற்சி வகுப்பை விருதுநகர் கலெக்டர் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் சிவகாசி அரசன் கணேசன் கல்லூரியில், அரசுப் பள்ளிகளில் பிளஸ்-2-வில் சிறப்பாக படித்த 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளுடன் கூடிய நீட் நுழைவு தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

    இதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான அறிவுரை மற்றும் ஆலோச னைகளை வழங்கினார்.

    பின்னர் அங்கு பயிற்சி பெற்று வரும் மாணவ- மாணவிகளிடம் தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேட்கப்படும் கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணுகும் முறைகள், எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் எடுத்துரைத்து ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

    பயிற்சி பெறும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் வகையிலும், நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தற்போது விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரில் பயின்று வரும் 4 மாணவர்கள், தாங்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்ற விதம், அதற்காக தங்களை எவ்வாறு தயார் படுத்திக் கொண்டனர்?, படிப்பதற்கான வழிமுறைகள், தேர்வை கையாண்ட முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, பயிற்சி மைய ஒருங்கி ணைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் 42 காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 10-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
    • 4 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மற்றும் உத்தமபாளையத்தில் நடைபெற்று வருகின்றது.

    தேனி:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் 42 காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 10-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 8ல் உள்ள 36 காலிப்பணியிடங்களுக்காக செப்டம்பர் 11-ந் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

    மொத்தம் 78 காலிப்பணியிடங்கள் அடங்கிய இத்தேர்வுகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சியின் போது இலவசப் பாடக்குறிப்புகள், ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்படும். தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி-4 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மற்றும் உத்தமபாளையத்தில் நடைபெற்று வருகின்றது.

    எனவே தொகுதி 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்களும் நேரடி பயிற்சி வகுப்பில் இணைந்து பயிலலாம். மேலும் இவ்வலுவலகத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நூலகத்தை போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ×