search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச பன்நோக்கு"

    • அந்தியூரில் இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோச னைகளை வழங்கினார்.

    அந்தியூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அந்தியூரில் இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் நடைபெற்ற இம்முகாமை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடா ஜலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் வரவேற்றார். முகாமில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், நரம்பியல் உள்ளிட்ட அனைத்து வகை யான சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோச னைகளை வழங்கினார்.

    இதில் 450-க்கும் மேற்பட்டோருக்கு இ.சி.ஜி., 150-க்கும் மேற்பட்டோருக்கு எகோ, 190 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் 800-க்கும் மேற்பட்டோருக்கு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. உயர் சிகிச்சை தேவைப்படு வோருக்கு அரசு மருத்துவ மனை மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

    முதல்- அமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை களும் வழங்க ப்பட்டன. நிகழ்ச்சியில் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் ஏ.சி. பழனிச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வ குமார், துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், மேற்பா ர்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, அலுவலகப்பணியாளர் சாந்து முகமது, தினேஷ், சிவலிங்கம், தலைமை எழுத்தர் தாமரை,

    தாசில்தார் பெரியசாமி, நில வருவாய் ஆய்வாளர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ், வருவாய்த்துறையினர், கவுன்சிலர்கள் சண்முகம், சேகர், யாஸ்மின் தாஜ், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் நாகராஜ், மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், சங்கரா பாளை யம் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, கெட்டி சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மாறன், அல்ட்ரா தொண்டு நிறுவன தலைவர் தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×