search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறால்கள்"

    • விற்பனைக்கு தயாராக இருந்த இறால்களை மர்மநபர்கள் பிடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடையில் சந்திரபோஸ் எனபவருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு வளர்க்கப்படும் இறால்கள் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வழக்கம் போல் சந்திரபோஸ் தனது இறால் பண்ணைக்கு சென்ற வலைகளை கொண்டு விற்பனைக்கு தயாராக இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான இறால்களை மர்ம நபர்கள் பிடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இதுபோல் இப்பகுதியில் அடிக்கடி மின் மோட்டார்கள், மின் ஒயர்கள் உள்ளிட்டவை திருட்டு நடைபெறுவதால் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என இறால் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×