search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருதரப்பினர்"

    • பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாததால் பஸ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மாணவர்கள் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    விருத்தாசலம் அருகே சின்ன வடவாடியிலிருந்து இன்று காலை டவுன் பஸ் பொதுமக்களை ஏற்றி கொண்டு விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் இருந்த கூட்டம் காரணமாக பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது வயலூர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்து வந்த போது பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவர்கள் மற்றும் அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாததால் பஸ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் இருதரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். தகவல் அறிந்த அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்ைச அனுப்பி வைத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த 5க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அறிந்த பா.ம. க.வினர் அங்கு திரண்டனர். அவர்கள்சாலையில் அமர்ந்து மறியல்செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரசம்செய்தனர்.

    • கும்பாபிஷேக விழா நடத்துவதில் இருதரப்பினரிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது
    • சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் வடக்கு வட்டம் பட்டவையனார், கொம்புக்காரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்துவேறுபாடு மற்றும் மோதல் ஏற்படும சூழல் இருந்தது. இதுதொடர்பாக கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அளித்த புகாரையடுத்து அவர்களை அழைத்து சமாதான கூட்டம் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    ஆலங்குடியில் உள்ள அலுவலகத்தில் வருவாய் வட்டாட் சியர் செந்தில்நாயகி தலைமையில் மற்றும் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, தலை மையிடத்து துணை வட்டாட்சியர் பாலகோபாலன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி வருகிற (செப்டம்பர்) 5-ந்தேதி அன்று கும்பாபிசேகம் நடத்துவது என்றும், மற்றொரு பிரிவினர் தங்களுடைய குலதெய்வங்களான கருப்பர் மற்றும் சன்னாசி ஆகிய தெய்வங்களுக்கு தை மாதம் கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், கரை தொடர்பான பிரச்சனையை பின்னர் நீதிமன்றம் சென்று பரிகாரம் தேடிக்கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.

    இதில் இருதரப்பினரிடையே ஏதேனும் முரண்பாடு ஏற்படும் பட்சத்தில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஒரு பிரிவினர் ஒத்துக்கொண்டு கையொப்பமிட்டனர். மற்றொரு பிரிவினர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

    இதனால் அறிவித்தபடி கும்பாபிஷேகம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×