search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இராமநாதபுரம்"

    • சாட்டை துரை முருகன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்
    • தேர்தலில் வெற்றி பெற வைக்க நவாஸ் கனி பணம் விநியோகம் செய்ததாக சட்டை துரைமுருகன் பேசியுள்ளார்

    5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியின் வழக்கறிஞர் யூ டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    சாட்டை துரை முருகன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், "நவாஸ் கனியை வெற்றி பெற வைக்க இராமநாதபுரம் கோபாலபட்டினம் பகுதி ஜமாத், ரூ.10 லட்சம் வழங்கியதாக' பேசியுள்ளார்.

    அதாவது, தேர்தலில் வெற்றி பெற வைக்க நவாஸ் கனி பணம் விநியோகம் செய்ததாக சாட்டை துரைமுருகன் பேசியுள்ளார்.

    அந்த நோட்டீசில், "சாட்டை துரை முருகன் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும், தன்னுடைய நற்பெயருக்கும் கூட்டணி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது. ஆகவே சாட்டை துரைமுருகன் 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்று நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.

    இந்த நோட்டீஸ் தொடர்பாக சாட்டை துரைமுருகன் பதில் அளிக்காத பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்று நவாஸ் கனி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    ×