search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனைக்குழு"

    • நாகர்கோவில் பி. எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் சஜிகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்
    • பி.எஸ்.என்.எல். எடுக்கும் அனைத்து முயற்சி களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உடன் நிற்ப தாக உறுதி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். சார்பாக 2022-24-ம் ஆண்டிற்கான முதலாவது தொலைபேசி ஆலோசனைக்குழு கூட் டம் நேற்று நாகர்கோவில் பி.எஸ்.என்.எல்.தொலை பேசி அலுவலக கூட்டரங்கில் நடை பெற்றது. நாகர்கோவில் பி. எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் சஜிகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் பி.எஸ். என்.எல். தொலை தொடர்பு சேவைகள் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். மலை பிரதேசம் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை விரிவு படுத்தப்பட வேண்டும். பி.எஸ்.என்.எல். எடுக்கும் அனைத்து முயற்சி களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உடன் நிற்ப தாக உறுதி அளிக்கிறேன். ஆலோசனைக் குழுவிற்கு உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய ஆலோசனைகுழு உறுப்பினர்கள், 'சில இடங்களில் ஏற்பட்டுள்ள மொபைல் கவரேஜ் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். சந்தாதாரர் சேவை குறைபாட்டினை உடனடி யாக களைய வேண்டும். தொலைபேசியில் உள்ள சிறு சிறு குறைபாட்டினை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    கூட்டத்தில் குமரி மாவட் டத்தில் தொலை தொடர்பு சேவை முன்னேற்றம் குறித்த பல்வேறு ஆலோசனைகள் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர்கள் விஜயன், அஜிதா, எழில் சைமன் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து ஆலோசனை குழுவிற்கு புதிதாக நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி முன்னிலை வகித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்த சாமி முன்னிலை வகித்தார்.

    விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பி.பி.தனராசு தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் செயல்பாடுகள் திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும். பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி, போன்ற திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக விளக்கம–ளிக்கப்பட்டது.

    வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் மேற்கொள்ளும் மானியத் திட்டங்கள். தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்ப–டும் திட்டங்கள் மற்றும் மானியங்கள். கால்நடை பராமரிப்புப்துறையின் மூலம் வழங்கப்படும் தடுப்பூசி முகாம்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் அதற்காக வழங்கப்படும் மானியங்கள். பட்டுவளர்ச்சித் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், மானியங்கள், இடுபொருள் குறித்தும், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானி–யத்திட்டங்கள், உழவர் சந்தை, சேமிப்பு கிடங்கு குறித்தும் வருகை புரிந்த விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

    கூட்டத்தில் பரமத்தி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்செல்வன், வேளாண்மை அலுவலர் பாபு, தோட்டக்கலை அலுவலர் மஞ்சு, கால்நடை உதவி மருத்துவர் நளினி, பட்டு உதவி ஆய்வாளர் கோமதி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சற்குணம் ஆகியோர் பங்கேற்று விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் அட்மா திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் விபரங்களையும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும், உழவன் செயலி செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் வருகை புரிந்த விவசாயிகள் ஆலோச–னைக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.

    ×