search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடிக்கையாளர் பிரச்சினைக்கு தீர்வு காண முயல வேண்டும் - ஆலோசனைக்குழு கூட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    X

    வாடிக்கையாளர் பிரச்சினைக்கு தீர்வு காண முயல வேண்டும் - ஆலோசனைக்குழு கூட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

    • நாகர்கோவில் பி. எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் சஜிகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்
    • பி.எஸ்.என்.எல். எடுக்கும் அனைத்து முயற்சி களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உடன் நிற்ப தாக உறுதி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். சார்பாக 2022-24-ம் ஆண்டிற்கான முதலாவது தொலைபேசி ஆலோசனைக்குழு கூட் டம் நேற்று நாகர்கோவில் பி.எஸ்.என்.எல்.தொலை பேசி அலுவலக கூட்டரங்கில் நடை பெற்றது. நாகர்கோவில் பி. எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் சஜிகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் பி.எஸ். என்.எல். தொலை தொடர்பு சேவைகள் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். மலை பிரதேசம் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை விரிவு படுத்தப்பட வேண்டும். பி.எஸ்.என்.எல். எடுக்கும் அனைத்து முயற்சி களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உடன் நிற்ப தாக உறுதி அளிக்கிறேன். ஆலோசனைக் குழுவிற்கு உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய ஆலோசனைகுழு உறுப்பினர்கள், 'சில இடங்களில் ஏற்பட்டுள்ள மொபைல் கவரேஜ் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். சந்தாதாரர் சேவை குறைபாட்டினை உடனடி யாக களைய வேண்டும். தொலைபேசியில் உள்ள சிறு சிறு குறைபாட்டினை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    கூட்டத்தில் குமரி மாவட் டத்தில் தொலை தொடர்பு சேவை முன்னேற்றம் குறித்த பல்வேறு ஆலோசனைகள் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். துணை பொது மேலாளர்கள் விஜயன், அஜிதா, எழில் சைமன் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து ஆலோசனை குழுவிற்கு புதிதாக நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    Next Story
    ×