search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரஞ்சு ஐஸ்கிரீம்"

    • சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் எப்டி செய்யாலாம்னு பார்க்கலாம்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீமை யாரும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். கோடை வெயிலில் குளுகுளுனு சாப்பிட சூப்பரான ஆரஞ்சு ஐஸ்கிரீம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க. ஆரஞ்சு பழத்தை கொண்டு செய்யப்படும் சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் எப்டி செய்யாலாம்னு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால்- 1 லிட்டர்

    ஆரஞ்சு பழம்- 3

    பாதாம், முந்திரி- 10

    செய்முறை:

    முதலில் ஒரு முழு ஆரஞ்சை பழத்தை எடுத்து அதன் மேல் பகுதியை வட்டமாக வெட்டி எடுத்துவிட்டு, அதனுள் இருக்கும் சதை பகுதியை மட்டும் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது முழு ஆரஞ்சு பழம் போல் முழுவதுமாக நமக்கு வேண்டும்.

    இதற்கிடையே அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரை லிட்டர் கொழுப்பு நிறைந்த பால் சேர்த்து அதில் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    கடாயின் ஓரங்களில் பிடிக்கும் ஏடுகளை கரண்டியால் எடுத்து பாலிலேயே மீண்டும் சேர்த்து விட வேண்டும். இந்த பால் வற்றி பால்கோவா பதத்திற்கு முன்புள்ள நிலையான கிரீம் பதம் வர வேண்டும். கிரீம் பதம் வந்ததும் இதில் பொடியாக நறுக்கிய பாதாம் , முந்திரி சேர்த்து, அரை ஸ்பூன் பாலாடை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

    இப்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். இதை 15 நிமிடம் அப்படியே ஆற விட வேண்டும். இந்த கலவை இட்லி மாவை விட சற்று கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

    இப்போது நாம் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சின் சதை பகுதியில் இருந்து விதைகளை நீக்கி விட்டு, அதன் ஜூசை மட்டும் ஒரு பாத்திரத்தில் கைகளை பயன்படுத்தி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது இந்த ஜூசை நாம் கிரீம் போல் தயாரித்து வைத்துள்ள பாலில் சேர்த்து கரண்டியால் கலந்து விட்டு, பின்னர் இதை நாம் உடையாமல் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்திற்குள் கரண்டியை பயன்படுத்தி ஊற்றிக் கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் ஏற்கனவே வெட்டி எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு தோலின் மேல் பகுதியை கொண்டு இதை மூடிக் கொள்ள வேண்டும். இதை இரண்டரை மணி நேரம் ஃப்ரீசருக்குள் வைத்து பின்பு வெளியே எடுத்து பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். 

     

    ×