search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயிரக்கணக்கான"

    • அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
    • பல்லாயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்தன.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதில் குருவ ரெட்டியூர், கரடிப்பட்டியூர், தண்ணீர்பந்தல் பாளையம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்தன.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,

    நாங்கள் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை முதலீடு செய்து கதலி ரக வாழையை பயிரிட்டோம். அடுத்த மாதம் அறுவடைக்கு தயா ராக உள்ள நிலையில் திடீரென மழை பெய்து எங்கள் வேளாண்மையை சேதப்படுத்தி விட்டது.

    இதனால் ஒரு வருட பயிரான வாழையை பாதுகாத்து வந்த நிலையில் திடீரென மழைக்கு சாய்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் ஏக்கருக்கு ரூ.4 லட்சம் வரை வரும் வருமானம் பறிபோனது.

    எனவே அரசு நிர்வாகம் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட எங்கள் விவசாயத்திற்கு நஷ்ட ஈடு வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

    • காலை அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியும், அம்மனிடம் வாக்கு கேட்டல் நிகழ்வும் நடைபெற்றது.
    • விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் சிறுவர் சிறுமிகள், குண்டம் இறங்கினார்கள்.

    அந்தியூர்,

    அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்,தேர் திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி, எருமை கிடா வெட்டுதல், கொடியேற்றம் பிரம்பு பூஜை பச்சை மாவு படையல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி இன்று காலை குண்டம் இறங்கும் விழா நடந்தது. முன்னதாக இன்று காலை அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியும், அம்மனிடம் வாக்கு கேட்டல் நிகழ்வும் நடைபெற்றது.

    அம்மன் வாக்கு கொடுத்ததும் தலைமை பூசாரி குண்டத்தில் இறங்கியதை தொடர்ந்து வீர மக்கள் வரிசையாக பூக்குழி இறங்கினர்.

    இதையடுத்து விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் சிறுவர் சிறுமிகள், குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    மேலும் பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி தலைமையில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி,மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் கோவில் செயல் அலுவலர் நந்தினிஸ்வரி, அலுவலர்கள் செந்தில்குமார், தணிகாசலம் மற்றும் அலுவலக பணியாளர்கள் பக்தர்களுக்கு,தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்திருந்தார்கள்,

    மேலும் இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும், திங்கட்கிழமை மீண்டும் தேர் நிலையை வந்து அடையும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ×