search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனி பெருந்திருவிழா"

    • அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
    • கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று ஆகும்.

    விநாயகர் திருவிழா

    48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் உற்சவமான விநாயகர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமர்சையாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிப் பட்டம் கோவில் உட்பிரகா ரத்தில் பல்லக்கில் வீதி உலா கொண்டு வரப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து, கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும் நடைபெற்றது. 6 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் விநாயகருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் உட்பிரகாரத்தில் வீதிஉலாவும் நடைபெறும். இதனைத்தொடர்ந்து 11-ந் தேதி முதல் மூவர் உற்சவமும், அதனைத் தொடர்ந்து 16-ந் தேதி முதல் சந்திரசேகரர் பவானி அம்பாள் உற்சவமும் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    பின்னர் 24-ந்தேதி ஆனிப்பெரும் திருவிழா கொடியேற்றம் சுவாமி சன்னதி முன்புள்ள பெரிய கொடிமரத்தில் நடை பெறுகிறது. ஜூலை 2-ந்தேதி ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேரோட்டத் திருவிழா நடைபெறுகிறது.

    இன்று காலை விநாயகர் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பெரியகுளத்தில் கவுமாரியம்மன்கோவிலில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடுதல் மற்றும் சாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.
    • வருகின்ற 27-ம் தேதி மறுபூஜை விழாவினை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து திருவிழா நிறைவு பெரும்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் வராக நதியின் தென்கரையில் கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

    பெரியகுளத்தின் கிராம கோவிலாக கருதப்படும் இந்த கோவிலில் வருடம் தோறும் ஆனி மாதத்தில் ஆனிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவினை முன்னிட்டு கம்பம் நடுதல் மற்றும் சாட்டுதல் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

    பெரியகுளம் வடகரையில் உள்ள பூசாரியின் வீட்டிலிருந்து கம்பம் முளைப்பாரிகள் ஊர்வலத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கவுமாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கம்பத்திற்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் போன்ற அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்த பின் கம்பம் நடுதல் விழா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து திருவிழா சாட்டுதழ் நிகழ்வும் நடைபெற்றது. இந்த சாட்டுதலுக்கு பின்னர் வருகின்ற 11-ம் தேதி கோவிலில் கொடியேற்றம், அதனை தொடர்ந்து அன்றிலிருந்து சாமி சிம்ம வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வானங்கள் மூலம் திருவீதி உலா வரும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 19-ம் தேதி பக்தர்கள் தீச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    வருகின்ற 27-ம் தேதி மறுபூஜை விழாவினை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து திருவிழா நிறைவு பெரும். கம்பம் நடுதல் மற்றும் சாட்டுதல் நிகழ்வினை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் நரசிம்மன் சிறப்பாக செய்திருந்தார்.

    ×