search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிநாதர் ஆழ்வார் கோவில்"

    • செப்புப்பட்டயங்கள் இந்த ஊரில் உள்ள காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலுக்குச் சொந்தமானவை ஆகும்.
    • செப்புபட்டயங்கள் கி.பி.17 மற்றும் 19-ம் நூற்றாண்டு பட்டயங்கள் ஆகும்.

    தூத்துக்குடி:

    திருக்கோவில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு - பராமரிப்பு நூலாக்க திட்டத்தின் பணிக்குழுவினர் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவடிப் பராமரிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது சுருணை ஏடுகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சுவடிகளுடன் இக்கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் 4 செப்புப் பட்டயங்களையும் கண்டறிந்தனர். இதில் 2 மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் கொடுக்கப்பட்டது. மேலும் செப்புப்பட்டயங்கள் இந்த ஊரில் உள்ள காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலுக்குச் சொந்தமானவை ஆகும்.

    இந்த செப்புபட்டயங்கள் கி.பி.17 மற்றும் 19-ம் நூற்றாண்டு பட்டயங்கள் ஆகும். இதில் முதல் 2 பட்டயங்கள் மதுரை திருமலை நாயக்கர் காலத்திலும், மற்ற 2 பட்டயங்கள் கோவில் நிர்வாகி மற்றும் முக்கியஸ்தரால் இந்த கோவிலுக்கு வழங்கப்பட்டவையாகும். முதல் பட்டயம் கி.பி.1637-ம் ஆண்டைச் சேர்ந்தது. அதில் காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலுக்கு திருமலைபுரம் என்ற ஊரின் வருவாயினைக் கொடுப்பது குறித்தும், 2-வது பட்டயத்தில் கோவிலுக்கு வழங்கிய நிலதானம் மற்றும் அதன் எல்லை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 3-வது பட்டயத்தில் உபயதாரர் பற்றியும், 4-வது பட்டயத்தில் மண்டகபடிதாரர்களுக்கு பட்டு கட்டும் மரியாதை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 13 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி நம்மாழ்வார் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • வருகிற 9-ந் தேதி காலை மாசிதிருவிழா தேரோட்டமும் நடக்கிறது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    நவதிருப்பதியில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    நேற்று கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கருட சேவை நிகழ்ச்சியில் பெருமாள் கருட வாகனத்தி லும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9-ந் தேதி காலை 9 மணிக்கு மாசிதிருவிழா தேரோட்டமும் நடக்கிறது. 10-ந் தேதி இரவு பெருமாள் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

    சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 11-ந் தேதி இரவு சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 12-ந் தேதி மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    விழாவில் இறுதி நாளான 13-ந் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதிகோவிலில் எழுந்தருளுகிறார்.அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரி திரும்புகிறார்.

    நிகழ்ச்சிக்கான எற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜித் மற்றும் நிர்வாகத்தினர் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    ×