search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டு தொடக்க விழா"

    • எஸ்.டி.பி.ஐ. கட்சி 15-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    ராமநாதபுரம்

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் ராமநாதபுரம் நகர் சார்பாக 9 இடங்களிலும், கீழக்கரை நகரில் 7 இடங்களிலும், பெரிய பட்டினம் நகரில் 3 இடங்களிலும், திருப்புல்லாணி நகரில் ஒரு இடத்திலும் மொத்தம் 20 இடங்களில் கொடியேற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    கீழக்கரை நகரில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, ராமநாதபுரம் நகரில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜமிளுன் நிஷா, பெரிய பட்டணம் நகரில் மாவட்ட தலைவர் ரியாஸ்கான், பெரியபட்டினம் ஊராட்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் பெரோஸ் கான், பொறியாளர் அணி ஷேக் ஜலால் ஆகியோர் கொடி யேற்றினர்.

    மாவட்ட அலுவலகத்தில் மாவட்டபொது செயலாளர் அப்து்ல் ஜமீல், திருப்புல் லாணி நகரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ் குமார், ராமநாதபுரம் நகரில் மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மாவட்டத் துணைத் தலைவர் தொகுதி துணைத் தலைவர் மூர்த்தி, தொகுதி செயலாளர் அக்பர் அலி, தொண்டரணி மாவட்ட தலைவர் ஜகுபர் சாதிக் கொடியேற்றி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து கீழக்கரை நகரில் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டது. பின்பு தெருமுனை கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் பேசினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    ×