search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "STPI Party"

    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • முடிவில் திருப்புல்லாணி நகர் தலைவர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எஸ்.டி. பி.ஐ. கட்சியின் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் திருப்புல்லாணியில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    தொகுதி பொருளாளர் கீழை அஸ்ரப் தொகுப்புரை வழங்கினார். செயற்குழு உறுப்பினர் குதுபுதீன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் கருத்துரை வழங்கினார். மாவட்ட பொது செயலாளர் அப்துல் ஜமீல், தமிழ் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் பேசினர். மாநில தலைவர் நெல்லை முபாரக் கொள்கை விளக்க சிறப்புரையாற்றினார்.

    இதில் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சோமு, கிழக்கு மாவட்ட பொருளாளர் அசன் அலி, மேற்கு சட்ட மன்ற தொகுதி செயலாளர் அக்பர் அலி, தொகுதி துனை தலைவர் மூர்த்தி, தொகுதி செயற்குழு உறுப்பி னர்கள் பாரூக் ராஜா முஹம்மது, சாதிக் சலீம் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சந்தன பீர், மேற்கு மாவட்ட செயலாளர் ஆசாத், மேற்கு சட்டமன்றத் தொகுதி தலைவர் நவர்சா, வர்த்தக அணி மாவட்ட தலைவர் சகுபர் சாதிக், மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சுபைர் அப்தீன், முஸ்தாக் அஹமத், முன்னாள் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணை தலைவர் முபீனா மற்றும் பெரிய பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புரோஸ் கான், கீழக்கரை 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பி னர் சஹீனா பேகம் கிழக்கு, மேற்கு மாவட்ட தொகுதி, நகர, கிளைகளின் நிர்வாகி கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். முடிவில் திருப்புல்லாணி நகர் தலைவர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.

    • எஸ்.டி.பி.ஐ. கட்சி 15-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    ராமநாதபுரம்

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் ராமநாதபுரம் நகர் சார்பாக 9 இடங்களிலும், கீழக்கரை நகரில் 7 இடங்களிலும், பெரிய பட்டினம் நகரில் 3 இடங்களிலும், திருப்புல்லாணி நகரில் ஒரு இடத்திலும் மொத்தம் 20 இடங்களில் கொடியேற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    கீழக்கரை நகரில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, ராமநாதபுரம் நகரில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜமிளுன் நிஷா, பெரிய பட்டணம் நகரில் மாவட்ட தலைவர் ரியாஸ்கான், பெரியபட்டினம் ஊராட்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் பெரோஸ் கான், பொறியாளர் அணி ஷேக் ஜலால் ஆகியோர் கொடி யேற்றினர்.

    மாவட்ட அலுவலகத்தில் மாவட்டபொது செயலாளர் அப்து்ல் ஜமீல், திருப்புல் லாணி நகரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ் குமார், ராமநாதபுரம் நகரில் மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மாவட்டத் துணைத் தலைவர் தொகுதி துணைத் தலைவர் மூர்த்தி, தொகுதி செயலாளர் அக்பர் அலி, தொண்டரணி மாவட்ட தலைவர் ஜகுபர் சாதிக் கொடியேற்றி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து கீழக்கரை நகரில் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டது. பின்பு தெருமுனை கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் பேசினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    • ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது.
    • ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி, கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் ஆகியோர் பங்கேற்று பேசினர். தொகுதி தலைவர் அப்துல் வஹாப் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் சோமு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி பொக்கனாரேந்தல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் சேருவதற்கான படிவத்தை மாவட்ட துணை தலைவர் சோமு வழங்கினார். அதனை தொடர்ந்து அனைத்து நகர நிர்வாகிகளுக்கும் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் கீழக்கரை, திருப்புல்லாணி,பெரியபட்டினம் நகர் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.

    ×